மீனாட்சி பாலகணேஷ்

மீனாட்சி. க. எனும் மீனாட்சி பாலகணேஷ், மதுரைப் பலகலைக்கழகத்தில் அறிவியலில் 1979இல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக மருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Drug Discovery) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார். மங்கையர் மலர், தீபம் (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சாி, ஓம்சக்தி, சிவசுந்தாி ஆகிய தமிழ்ப் பத்திாிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, தாரகை, தமிழ் ஹிந்து, பிரதிலிபி ஆகிய இணையத்தளங்களிலும் இலக்கியக் கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையத்தளம் இவருடைய 'கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்' எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், 'இனி என்னைப் புதிய உயிராக்கி' எனும் புதினம், தாகூாின் 'சண்டாளிகா', 'சித்ரா' எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் 'காகசஸ் மலைக்கைதி' எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல், பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பாிசு பெற்றது.