கணியன் பாலன்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்பொறியியல் கல்லூரியில் வேளாண்மைப் பொறியியல் பட்டப்படிப்பு படித்துவிட்டு, தமிழக அரசின் வேளாண்மைப்பொறியியல் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். தமிழக நீர் வளம் குறித்துச் சிறு நூல்கள் சிலவற்றை எழுதியவர். தமிழக வரலாறு குறித்து “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற மிகச்சிறந்த நூலை ஏழு வருடங்கள் ஆய்வு செய்து எழுதியவர். இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள், “சங்க இலக்கியங்களை காலவரிசைப்படுத்தல் ஆய்வுகளில் பேரா. சிவராசப்பிள்ளை, பேரா. கமில் சுவெலபில் ஆகியோர் வரிசைப்படுத்த முயன்றுள்ள போக்குகளின் அடுத்தகட்ட ஆய்வாகக் கணியன்பாலன் அவர்களது ஆய்வுகள் வடிவம் பெற்றுள்ளன…….இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு என்பது பிறரை மலைக்கச்செய்கிறது. அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தொடர்வாசிப்பு, தேடல் ஆகிய அனைத்திற்கும் உரியவராக ஆய்வாளர் கணியன்பாலன் அவர்களைக் காணமுடிகிறது…… கணியன்பாலன் அவர்களின் தேடல், அதற்கான அவரது உழைப்பு ஆகியவற்றைத்தமிழ்ச் சமூகம் கொண்டாடவேண்டும்….. அவர் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ள மிக அரிய வளம். இந்த வளத்தை நாம் போற்றிப் பாராட்டுவோம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.