முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவு விருது

0

மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்களின் நினைவாக வழங்கத் திட்டமிட்டுள்ள முனைவர் ‘பழ. கோமதிநாயகம் நினைவு விருது’க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

திரு. பழ.கோமதிநாயகம் அவர்கள் அடிப்படையில் பாசனப் பொறியாளர் என்ற போதிலும் பாசனம் மட்டுமின்றிப் பல்வேறு துறைகளிலும் ஆர்வம்கொண்டு இயங்கி வந்தவர். தீவிரமான வாசிப்பாளர்.

அவருடைய நினைவாக ஆண்டுதோறும் முனைவர் ‘பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளை’ சார்பில் அவர் ஆர்வம் கொண்டிருந்த துறைகளில் – பாசனம், எழுத்து – இலக்கியம், தொல்லியல், சமூகச் செயல்பாடு என – ஏதேனுமொன்றிலிருந்து தனிச்சிறப்பு பெற்ற ஒருவருக்கு (அல்லது அமைப்புக்கு) முனைவர் ‘பழ. கோமதிநாயகம் நினைவு விருது’ வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

* விருதுக்கான தொகை ரூ. 1 லட்சம்.

* ஒவ்வோராண்டும் இந்த விருது, முனைவர் பழ. கோமதிநாயகத்தின் நினைவு நாளான டிசம்பர் 29 ஆம் நாளில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான விருதுக்கு உரிய மதிப்புடையோர் பற்றி நண்பர்கள் அல்லது அறிந்தவர்களிடமிருந்து பின்வரும் முகவரிக்கு, டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

எம். பாண்டியராஜன்,

முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளை

12,லோட்டஸ் அபார்ட்மென்ட்ஸ்,

22, வெங்கடேசபுரம் காலனி

3-வது குறுக்குத் தெரு,அயனாவரம்,

சென்னை-600 023

 

தகவல் : சீராசை சேதுபாலா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *