திருப்பூவணப் புராணம் – பகுதி – (12)
கி.காளைராசன்
மணிகன்னிகைச் சருக்கம்
407 நற்கதிபெறுந்திரணாசனன்கதை
யற்புதங்கேட்டுநெஞ்சமைதிகொண்டிலன்
சொற்றகுமாதவச்சூதயான்புகல்
கிற்பனாலின்னமுங்கேட்குமாசையால்
408 ஓதருமுலகிலாருயிர்கள் செய்திடு
பாதகமனைத்தையும் பாறல்செய்யுமக்
கோதறுமாமணிகுண்டமேன்மையை
யேதுவினோடெடுத்தியம்பல்வேண்டுமால்
409 உற்றமன்பதைக்குபகாரியாவது
மற்றுநீயல்லதிவ்வையத்தில்லையாற்
சொற்றிடென்வாய்மொழிதுணிந்துநாடியே
யிற்றெனவேவிரித்தினிதினாலரோ
410 என்றிவைசவுனகனியம்பக்கேட்டரு
டுன்றியதுகளறுசூதன்சொல்லுவான்
கன்றிடுமறுபகைகடிந்துநாடொறும்
வென்றிகொளந்தணர் வேந்தர் வேந்தனே
411 அத்தலப்பெருமையையாயிரம்பெரும்
பைத்தலையனந்தனும் பங்கயத்தனுஞ்
சித்திரமலர்த்திருமாலுந்தேவரு
மித்திறமெனவுணர்ந்தியம்பலாகுமோ
412 ஆயினெம்மாலிமூதறையப்பாலதோ
தாயினுமுயிர்க்கருள்சவுனகாதிப
தூயவாசான்றனாற் சொல்லுமந்தண
நேயமோடதிற்சிலநிகழ்த்துவாமரோ
413 அண்டமோர்விராட்புருடன்றனங்கமாம்
புண்டரீகத்திருப்பொருந்தும்பூவணங்
கொண்டபேரெழில்குடிகொண்டவன்முக
மண்டலமாகவேமறைந்துவைகுமால்
414 பண்டைநாளமுதகும்பத்திலாரமு
தெண்டகுமணிமயமாகியிப்புனல்
விண்டலநின்றதுவீழ்தலான்மணி
குண்டமென்றொருபெயர்கொண்டிலங்குமால்
415 துன்னுதற்கரியவத்தூயதீர்த்தமா
மன்னதினாடினோரமுதருந்தியே
பன்னுபத்தயன்றன்கற்பம்பரிந்துதாம்
பொன்னுலகத்தினிற்பொருந்திவாழ்குவார்
416 அரியயனுருத்திரனமரர்கோன்கடற்
றரைபுகழ்நாரதன்சனகனாதியர்
கருடர்கந்தருவர்நற்கபிலரேனையர்
திருமணிகன்னிகைத்தீர்த்தம்வாழ்வரால்
417 கோலமன்னுதீர்த்தமாடுகுலவுபூர்வமுகமதாய்
வாலுகந்தனான்மிகுந்தவானிலங்குவெய்யவன்
சீலமோடுசெய்யிலிங்கதெரிசனஞ்செய்வோர்கொடுங்
காலன்மேனிதானிரண்டுகண்கள் கொண்டுகண்டிடார்
418 அந்தலிங்கதரிசனத்தினானன்முத்தியடையுமால்
வந்துநாளுநாளுமேவணங்கினோர்கள்யாவரும்
புந்தியாற்செய்பாவமும்புண்ணியம்மதாகுமா
லிந்தநீர்மையுண்மையுண்மையென்பதையமில்லையே
419 எண்ணிறைந்தநன்மணிகனிகையினெய்தியாடுதல்
கண்ணினண்ணுபூவணக்காசிலிங்கதரிசனம்
புண்ணியம்புரிந்துளோர்தமக்குநேர்பொருந்திடும்
பண்ணுபாதகர்க்கொர்காலமும்பலித்திடாதரோ
420 இருடுரந்தருள்சுருக்குமிம்மணிகன்னிகைநதி
யருடவத்தினானதானமதனினாலுமன்புகூர்
கெரிசனத்தினாலுமிக்கசீர்தயங்குகங்கையின்
பரிசனத்தினாலும் வெய்யபாதகங்களழியுமால்
421 தெரியினரியபிரமகத்திதீர்க்குமுரியதரிசனம்
பரவுமமுதநாளுமுண்ணல்பண்ணுமேவுபரிசன
மரியபலமெலாமளிக்குமத்திருத்தநானமே
விரவுமமுதமணிமயங்கொண்மணிகனிகையின்மான்மியம்
422 தந்தைதாய்தமக்கிழைத்ததணிவில்பாதகங்களும்
பந்தமாற்றுகின்றதோர்பராபரன்றுரோகமுஞ்
சுந்தரங்கொள்வேறொர்மாதர்தோளணைந்ததோடமும்
முந்தையோரைநிந்தைசெய்தமுடிவிலாதபாவமும்
423 வேதியர்க்குவெகுளிசெய்தன்மிசைதலல்லமிசைதல்வெம்
பாதகங்கண்மாடபத்தியங்களாதிபாதக
மோதுகோள்களாதிபாவமொழியுமாலிப்பூவணந்
தீதிலன்பினோடுவந்துதெரிசனஞ்செயளவினில்
424 இத்தலத்தில்வைகியேயிடும்பையில்குடும்பியா
யுத்தமகுலத்தனாகியொற்கமிக்குடையனாய்
முத்திகாமனானசீவன்முத்தனங்கையிற்றில
மத்தனைச்செழும்பொனல்கினோர்பலத்தையறைகுவாம்
425 தூயவுலகினேமருவுசுகமெலாமடைந்தவ
ணேயபுத்திரர்புத்திரர்களோடுநீடுவாழ்ந்
தேயநற்சிவபுரத்தினேறியின்பமுற்றதின்
மேயநாளிருந்துமேதினிக்குவேந்தராவரால்
426 ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ
தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே
தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா
லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்
427 பின்னர்நற்றவந்தனிற்பெருங்குலத்துதித்துநேர்
பன்னுபுத்திரர்பவுத்திரர்களோடுபரிவினான்
மன்னுசெல்வமுடன்மகிழ்ந்துவாழ்ந்துமீண்டுமாசிலாச்
சின்மயன்றினம்பொருந்துசிவபுரத்தையடைகுவார்
428 ஓதுமுத்தராயணத்தினோடுதக்கிணாயன
மீதினுற்றகதிர்கடம்மைவெவ்வராவிழுங்குநாண்
மாதவுற்பவத்தினமதிவிரிந்தொடுங்குநா
ளாதிவாரம்பமூதொர்பக்கமவ்வெதிபாதத்தினம்
429 ஏலுமாறுதலையிலிட்டவெண்பமூதுசேர்ந்தநற்
காலமோடுசங்கிராந்திகாலமட்டமீதனின்
வாலசங்குதங்கிநன்குவளருமணிகன்னிகையினின்
மாலகந்தைகொன்றசூலவயிரவன்றனருளினால்
வேறு
430 இலகொளிபரப்புமெல்லோனெதிர்முகந்தரவிருந்து
மலருடன்றூர்வைமிக்கவண்கனிதண்டுலங்கொண்
டலகிலாப்பவங்கணாயேற்காடுமித்தீர்த்தந்தன்னாற்
றொலைவுசெய்தருளவேண்டுஞ்சோதியேயெனப்பணிந்து
431 சூரியவிலிங்கந்தன்னைச் சொல்லுமந்திரத்தினாலே
சீர்பெறச்செபித்துத்தேவதேவனைப்பிரார்த்தித்தன்பாற்
பேர்பெறுதீர்த்தமூழ்கிப்பிதிர்களோடிருடிகட்காங்
கேர்பெறுதர்ப்பணங்களிரவிமந்திரத்தினாலே
432 யாவனிம்முறையிற்செய்வானவன்கடலுடுத்தபார்மேற்
றேவர்கண்முனிவர்மிக்கதென்புலத்தவர்கடன்செய்
மேவியபிரமசாரியெனின்விருப்பறுத்தேயொல்லை
மூவுலகங்கள்போற்றமுத்தியையடைவனன்றே
433 அருமணமுடித்தோன்பின்றையைவகைவேள்வியாற்றிக்
கிரியைநூற்கிடக்கையானேகேடில்பூசனையமைத்தே
திருமகள்சுவர்க்கஞ்சேயாற்சேர்வனீதொருவினாலும்
பெருகுமத்தீர்த்தமூழ்கிற்பிதிர்கடன்றரும்பேறுண்டாம்
434 தீதிலாவேள்விசெய்தோன்றேவனாந்தன்மைபோல
வோதுமத்தீரத்தம்பொனுகவுவோனும்பனாவா
னாதலாலத்தலம்போலரும்பிதிர்கடன்கடம்மைப்
போதல்செய்தலங்களிந்தப்பூதலத்தில்லைமாதோ
435 இத்தலமன்றிவேறோரிருங்கதியளிக்குந்தான
மித்தலமதனிலின்றாமியம்பிடினாகையாலே
யித்தலமதிகமாமாயிரங்கோடிநற்றானத்து
ளித்தலங்கண்டாலிம்பரிருங்கதியிரண்டுமுண்டால்
436 கற்றுணர்வுடையோர்கண்டகண்ணிமைகைநொடித்தல்
பெற்றிடலமையுமேலும்பிறங்கிடுஞானந்தன்னா
லுற்றவஞ்ஞானந்தன்னாலோதுபூவணத்தில்வாழ்வோர்
நெற்றியிற்றிகழந்த வொற்றைநேத்திரராவரன்றே
437 நல்லதோர்தளிர்தானாதனவிலொருகனிதானாதல்
வில்லிலங்கியபுரூரமின்னிடையன்னைபாகம்
புல்லியபூவணத்தெம்புனிதனுக்கினிதளிப்போர்
சொல்லுருத்திரனாய்ப்பின்னர்ச்சுத்தமாமுத்திசேர்வார்
438 வோறொருதலத்தினின்று மெய்யுயிர்வியோகமெண்ணி
மாறிலாவித்தலத்தின்வைகுறின்மரணகாலை
கூறரிதாயசெம்பொற்கொடியிடைமடவாளோடுந்
தேறிடவந்தவன்றன்றெக்கிணகன்னந்தன்னில்
439 பாரிடைப்பிதாமகற்குப்பயப்பயப்பரிதல்போலச்
சீருடைக்கடவுடன்பொற்றிருமேனிசாத்திக்கொண்டு
பூரணமகிழ்ச்சியோடுபுத்திரன்றன்னைத்தேற்றித்
தாரகப்பிரமந்தன்னைத்தானுபதேசஞ்செய்வான்
440 சாற்றுதுமரன்றனாணைசத்தியமீதுசாற்றி
லாற்றல்சான்முனிவகேண்மோவாதலாலரிதினேனு
நாற்றிசையுலகமேத்துநற்றிருப்பூவணத்திற்
போற்றியேயெவரும்வாழ்கபுந்திகொண்டெந்தஞான்றும்
441 மருவியகாசிவாசமக்கண்மிக்குடல்வருந்தும்
பொருவிறென்பூவணந்தான்பொருந்திடாமெய்வருத்த
மரியனபொருளொன்றில்லையாதலாலைந்தவித்தீர்
கருதிலப்பூவணந்தான்காசியிலதிகமாகும்
442 பவமில்பஞ்சாமுதத்தாற்பஞ்சகவ்வியத்தான்மிக்க
சுவைதருநன்னீர்தன்னாற்சோதியையாட்டுவிப்போன்
சிவனதுவடிவமென்றேசெப்பிடுமுலகமெல்லா
மவனதுபெருமைதன்னையறிகுவனமலன்றானே
443 கதிர்விடுமணிகுண்டத்தின்கரையினிற்கடவுண்முன்னர்ப்
பிதிர்மகிழ்சிராத்தத்தோடும்பிண்டநற்றிலோதகத்தை
விதிமுறைபிதிர்கட்காற்றின்வெஞ்சுடர்ப்பரிதிவானோன்
மதிதருவாழ்நாள்காறுமனமிகமகிழ்ச்சியுண்டால்
444 பொங்குவெங்கதிர்பரப்பும்புனிதமாமணிகுண்டத்திற்
றங்குநீரிடைப்பிதிர்க்கடங்களங்கங்கிடந்தா
லங்கவர்மகிழ்ச்சிகூர்ந்தாங்கக்கணந்தன்னின்முக்க
ணெங்கணாயகனாற்பெற்றேயிடபவாகனத்தராவார்
445 ஆதலாலரியமைந்தரத்தியைப்பத்தியாலே
யோதிடும்பிதிர்கடாம்போயுயர்பதிகதியிற்சேர்வான்
காதலால்வருந்தியேனுங்கடைப்பிடிகருதிமாதோ
கோதிலாமணிகுண்டத்திற்கொண்டிடக்கடவரன்றே
446 முந்தொருகாலந்தன்னின்மொழியினோர்கங்கமங்கந்
தந்திடந்தணனங்கத்தைத்தசையெனநசையிற்கொண்டே
யந்தநற்றீர்த்தத்திட்டாங்ககன்றதக்கணத்தினன்னோ
னிந்தநற்றீர்த்தந்தன்னாலிருங்கதியேறினானால்
447 இந்தநற்றீர்த்தம்வேதத்தியம்பிடுஞ்சாரமாகு
மிந்தநற்பிறப்புக்கீறுசெய்திடுகடவுளாகு
மிந்தநற்கதைச்சுருக்கமியம்பினனீவிருந்தா
மிந்தநன்மாணக்கர்க்கிங்கிசைத்திடுமெந்தஞான்றும்
448 சந்தமாமறைதேர்கின்றசவுனகமுனிவகேண்மோ
வந்தநற்பிரமகைவர்த்தந்தருமத்தியாய
மிந்தவாறடைவிற்றேர்தியெழுபதின்மேலிரண்டாம்
புந்திகொள்புகழ்செறிந்தபூவணக்காதைமாதோ
வேறு
449 சேணுலாவியதிங்கடருங்குடைசேருமாமதன்றன்றனைவென்றதோ
ரேணுலாவியவின்பசுகம்பெறுமேசிலாவருடந்திடுமந்தணீர்
மாணுலாவியமண்டலமெண்டகுமாசிலாமணிகுண்டமடைந்தசீர்
பாணுலாவியசெஞ்சொல்பகர்ந்தவர்பாகசாதனன்றன்பதிதங்குவார்
மணிகன்னிகைச் சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 449
*****
நாலாவது
துன்மனன்சருக்கம்
450 தூண்டுகின்றசெஞ்சுடர்கொள்சோதிதாள்
பூண்டவன்புசேர்பொற்பின்மேலையோன்
காண்டகுந்தவச் சூதன்கண்ணுறீஇ
மீண்டுமோர்கதைவிளம்பன்மேயினான்
451 வீரவேடனைவென்றசௌனக
வோர்கநீயிமூதுரைப்பக்கேட்டிடி
லாருயிர்க்கெலாமாயுணல்கிடுஞ்
சேரும்வல்வினையாவுந்தீர்க்குமால்
452 வேதநன்குணர்வியாதன்முன்னரே
யோதிநெஞ்சகத்துவகைகூர்தருங்
கோதிலாமணிகுண்டமான்மிய
மேதுவாற்சிறிதியம்புவாமரோ
453 தருமநன்கதைதஞ்செவிக்கொளார்
நரகவாதிகளாவர்நாளுமே
திருமிகுங்கதைசெவிமடுத்துளோர்
மருவிடுஞ்சுவர்க்கத்தின்வாழ்குவார்
454 நவிற்றுகின்றவெந்நரகமென்றுநற்
சுவர்க்கமென்றுமேற்சூதமாதவ
வௌற்றினாலிவையேயுமாலரோ
வவற்றைநீவிரித்தருளவேண்டுமால்
455 தந்தைதாய்புகழ்தருமதேசிகன்
முந்தைநான்மறைதன்னைமுற்றுண
ரந்தணாளரையறிஞர்தங்களை
நிந்தியார்தமைநிந்தைசெய்துளோர்
456 பொருவினான்மறைபுகலுமந்தண
ரானரும்பொருளபகரித்துளோர்
கருதிவந்துபொய்க்கரிபகர்ந்துளோர்
பரவுகன்னிகைதனைப்பழித்துளோர்
457 மதுநுகர்ந்திடுமங்கையானன
மதனைமோந்தவரவளைமேவினோர்
கதுமெனப்ப்ரமகத்திபண்ணினோர்
விதமுறுவிடர்விரவுகாதலர்
458 நன்குலத்திலாசாரநந்திடாத்
தன்குலக்கொடிதனிபுலம்பவே
பொன்பறிப்பவர்தோளைப்புல்குவோர்
மின்குலத்தியைப்பெட்பின்மேவுவோர்
459 கொழுநரைப்பிழைத்தோர்கள்கூடுறா
மழலையின்சொல்வாய்மைந்தர்பூணணி
விழைவின்வவ்வினோர்வெமூகிநன்பொருள்
பழுதிலாதுயர்பசுவைவிற்றுளோர்
460 புண்ணியப்புனல்புண்ணியத்தல
மெண்ணிடும்பதினெண்புராணநூ
றண்மையாகநிந்தனையிசைத்துளோ
ரண்ணலாலயமிலயமாக்குவோர்
461 அண்ணறன்னைநிந்தனையறைந்துளோர்
பண்ணிடுந்தருமம்பழித்துளோர்
திண்ணமாயவைசிதைவுசெய்துளோ
ரெண்ணறம்பொருளெண்ணிவிற்றுளோர்
462 அன்னம்விற்றுளோரதுபழித்துளோர்
முன்னைநூல்வருமுறைதிறம்பினோர்
சொன்னவாசகந்தோமுறுத்துளோர்
பன்னலாக்கொடும்பழிபகர்ந்துளோர்
463 கருதுகின்றதங்காரியத்தினான்
மருவினோர்கடம்மன்னுகாரியம்
பெருகுகாதலிற்பிழைபடுத்தினோர்
பரிவுகூர்ந்துளோரவரைப்பார்த்துளோர்
464 நந்தனவனநறியகூவனீர்
தந்திடேரிதான்றந்திடக்கருத்
துந்துகாதலினுரைத்துளோர்தமை
நிந்தைசேர்ந்தசொன்னிகழ்த்திநின்றுளோர்
465 தந்தைதாய்திவசஞ்செயாதவர்
வந்துநம்பினோர்தமைவதைத்துளோர்
சுந்தரந்துதைந்திலங்கு தொன்மைசால்
வெந்தநீறணியாதமெய்யினோர்
466 சிந்தையின்மகிழ்தந்திடுந்திரு
வைந்தெழுத்தினையவமதித்துளோ
ரெந்தைகண்டிகையினையிகழந்துளோர்
நிந்தைசேரிவர்நிரயவாணரே
467 திருகுசிந்தனைதீர்ந்தமாதவ
மருவுஞாலமேன்மன்பதைக்கெலாம்
பெருகிநாடொறும்பீழைமம்மர்செய்
நரகுறுந்திறநவிலுவாமரோ
வேறு
468 கும்பிபாகங்கராளங்கூடுவிட்டாசனத்தோ
டம்புவியிகழ்லாலாம்புசேவனமறையுங்கீலம்
பம்புவெங்கிருமியுண்டல்பகர்ந்தவிகராளங்கண்டங்
கம்பதப்ரகரங்காலசூத்திரங்கரியகாகம்
469 ஒட்டகம்புலியயத்தோடுறுமயிடத்தின்றுண்டம்
கொட்டிடுதத்தாங்காரங்கொல்லயபாத்திரஞ்சேர்
தட்டலகுட்டனந்தீசேர்ந்தசைகத்தினில்வறுத்தல்
பட்டுருவசிபடைத்தபத்திரமூத்ரபானம்
470 மன்னியரவுரவஞ்சேர்மாரவுரவங்களாதி
தன்மைகளுணருங்காலைத்தருமராசனுந்தயங்குஞ்
சின்மயனருளாற்றேருஞ்சித்திரகுத்தன்றானு
மிந்நிலைதன்னைநாடியிற்றெனக்கிளத்தலாகா
471 ஆதலால்யாவரேனுமரும்பெரும்பாதகங்க
டீதுறமுயலிலிந்தத்தீநரகடைவரன்றே
யாதுகாரணத்தினாலுமிகபரமியைவோர்தீய
பாதகமானவற்றைப்பாற்றிடக்கடவரன்றே
472 சொற்றிடுந்தருமமுந்தான்சுருக்கியேதெரித்துச்சொல்வா
மற்றதுமுனிவகேண்மோவகிஞ்சையேவாய்மைசேர்த
லுற்றிடுகளவுதீர்தலுளமகிழ்கூர்தலோடு
பொற்புறுதேகசுத்திபூசைசன்னியாசிபூசை
473 துறவிகடமதுபூசைசொல்லிடுமதிதிபூசை
வறியரைக்கதியிலோரைமருவுமந்தகரைக்காத்த
லுறுமனச்சழக்குத்தீர்த்தலுற்றிடுசுகன்மம்பேண
லறையகிஞ்சாதியீரேழந்தணர்விதியிற்றந்தோர்
474 சரணடைந்தோர்கடம்மைத்தாங்குதன்மாகமூழ்க
லானருச்சனையியற்றலதிதியர்க்கனமீவோர்க்குப்
பரவுபகாரம்பேணல்பண்ணுகன்னிகாதானத்தோ
டுரியவான்முதிரையெள்ளோடுயர்பலதானஞ்செய்தோர்
475 தருமகாலங்கடன்னிற்றண்புனற்பந்தர்செய்தோர்
பொருவில்புண்ணியம்புரிந்தோர்புங்கவர்யாரும்பூசை
யுரிமையினியற்றவுள்ளமோர்தருங்காதல்கூர்ந்தே
திருமிகுசுவர்க்கபோகத்தெரிவையர்திரட்சியோடும்
476 நம்பிநாடகநடிப்பநவமணித்துவசமின்னக்
கிங்கிணிமாலைத்தாமங்கெழுமியேயெங்குந்தூங்கக்
கண்கொளாத்துணைவெண்கற்றைக்கவரிக்காலசைப்பமாதர்
விண்குலாவியவிலக்கவிமானத்தினாப்பண்மேவி
477 தெண்டிரைக்கடற்பாற்கொண்டதிசைவிசயஞ்செலுத்தி
வண்டருநீழல்சேர்ந்துமிக்கபூந்தேன்றுளிப்ப
வெண்டகுமுலகம்போற்றவீரேழிந்திரர்கள்கால
மண்டர்களடிவணங்கவமருலகத்தில்வாழ்வார்
478 முண்டகனனையவேதமுனிவமுன்னிறுத்தவாற்றாற்
கண்டதையன்றிக்கேட்டகாலையிற்பவங்கடீர்க்கு
மண்டலம்பரவுமந்தமாமணிகுண்டமேன்மை
யெண்டொகைபெறவெடுத்தங்கிசைக்குவமின்னுங்கேண்மோ
479 நயவுணர்வறியாதானோர்நான்மறைக்குலத்தின்வந்தோ
னெயினரோடிணங்கிவாழுமிழிதொழின்முழுதுணர்ந்தோன்
கயமுறுகபிலைநன்னீர்க்கரையினிற்கருதிவாழ்வோன்
றுயர்தருதுராசாரஞ்சேர்துன்மனனென்னும்பேரோன்
480 சீர்த்திகளகன்றவேதத்திறங்கள்யாவுந்திறம்பி
யார்த்தநல்லறிவிழந்தேயறந்தருஞ்செயன்மறந்து
கூர்த்தவெங்குன்மநோயாற்கொலைபுரியெயினரோடுந்
தூர்த்தர்களோடுங்கூடித்தொன்னெறிமுறைதுறந்தான்
வேறு
481 காதலுடன்மாதர்பயில்காமகலைதன்னை
நாதமொடுபாடிமிகநாடகநடிப்போன்
றீதில்பலதேனுவொடுசெந்தழல்வளர்க்குஞ்
கோதின்மறையோரைநனிகொன்றுயிரையுண்போன்
482 ஏற்புடையபாலகரையிட்டிடையினோரைப்
பாற்படுவாலீசரொடுபண்புடைமையோரைச்
சீற்றமொடுதேசமிசைசென்றுநனிகொன்று
கூற்றுணவிரும்பியுயிர்கொள்ளையிடுகிற்போன்
483 சொற்றகையவின்னபலதொல்லுலகினோரைச்
செற்றமொடுகொன்றவர்கள்செம்பொனவைகொண்டே
வெற்றிமிகுபாதகன்விரும்பியணையாத
கற்புடையமங்கையர்கள்காசினியிலுண்டோ
484 கொன்றுதிரியுங்கொடியகூற்றமனையான்செய்
நன்றிகளிலொன்றறியுநன்றியதுவுண்டோ
சென்றுபடிகின்றதொருதீர்த்தமதுவுண்டோ
வன்றியிவனீந்திடுமரும்பொருளுமுண்டோ
485 எண்டிசைமுகத்தினமரெக்கடவுடன்னைக்
கண்டனனெனப்பரவுகட்டுரையுமுண்டோ
வுண்டலரிதாய்வளர்தலோருயிருமுண்டோ
மண்டனில்வதைக்கரியமன்பதையுமுண்டோ
486 திண்டிறலின்வேட்டைபுரிசிந்தைமிகுதீயோ
னெண்டகவியம்பலுறினின்றுமிவன்முன்னும்
பண்டரொருபாரினிடைபண்ணவருபாவ
முண்டெனவெடுத்தினுமுரைத்திடவுமுண்டோ
487 கட்களவுபொய்மைகொலைகாமமுறுகாமத்
துட்டரெனவேமருவுதூர்த்தர்தொழுமூர்க்கன்
மட்டறுகிராதரெனுமாகுலவரோடு
மிட்டமுறநாளுமுலகெங்குமுழல்கின்றான்
488 சத்தியமொழிச்சவுனகத்தலைவநாளுந்
துய்த்தல்பழுதென்றுபகர்தூய்மதுவுமுண்டே
பத்திதருபன்னகபணாமுடிகிடந்த
வித்தலனவன்செய்பவம்யாதெனவுரைப்பாம்
489 துன்றியமதங்கர்பலதூர்த்தர்புடைசூழ
வென்றிதருவேடருடன்வேட்டைமிகுதீயோன்
மன்றலவிழ்கண்டகவனங்கடொறுநாடிச்
சென்றுபலதேசமவைசிலபகல்கழித்தான்
490 மன்னுமிருவினையொப்புவந்தடைதலானு
மன்னதொர்திரோதமருளாய்வருதலானும்
பன்னருவிழாவணியெனப்பகர்தல்கேட்டுப்
பொன்னுலகெலாம்பரவுபூவணமடைந்தான்
வேறு
491 இடர்ப்பிறப்பிறப்பென்றோதுமிருங்கடற்படிந்துநாளுங்
கடைப்படாதுயிர்க்கிரங்கிக்கதியருள்புரியநீடும்
படித்தலம்போற்றுகின்றபங்குனியுத்தரத்தின்
விடைக்கொடியேற்றிமிக்கவிழாவணிநடந்ததன்றே
492 மதிதொடுசெம்பொற்றேரூர்மாடநீண்மறுகுதோறும்
புதுநறுங்கலவைச்சேறுபொலிதரமெழுகிக்கோலம்
விதிபெறவெழுதும்வாயில்வெண்ணிறப்பளிக்குத்திண்ணை
முதிர்நிலாவெறிப்பத்தூயமுளைகொள்பாலிகைவயங்க
493 சீர்மணிமாடந்தன்னிற்சித்திரகூடந்தன்னி
லேர்பெறுமாமியத்தினெழுநிலைமாடந்தன்னிற்
றோரணவீதிவாயிற்சுடர்மணிமண்டபத்திற்
பூரணகுடநற்றீபம்பொங்குவெங்கதிரிற்பொங்க
494 நீடுகோபுரவாயிற்கணிலாவுமிழ்நிலாமுற்றத்தி
னாடரங்கதனிற்செம்பொனம்பலந்தன்னிற்சோதி
கூடுநற்சதுக்கந்தன்னிற்கொடிமணிச்சித்திரஞ்சேர்
மாடகூடதினட்டமங்கலநின்றிலங்க
495 மிகுபுகழ்வேந்தர்விண்ணோர்மிண்டியவீதியின்கண்
மகுடநன்மணியின்குப்பைவயின்வயினலகிட்டெங்கும்
புகழ்பெறத்தெளித்தவாசப்புனிதநீரொடுபுத்தேளிர்
மகிழ்வொடுபொழிமந்தாரமாமலர்வாசம்வீச
496 மாமணித்தேர்களெங்குமாடமண்டபங்களெங்குந்
தாமநீள்வீதியெங்குந்தக்கபூம்பந்தரெங்கும்
பூமகளுறையுளெங்கும் பூங்கமுகரம்பைநாட்டிக்
காமர்பொன்னகரமென்னக்கடிநகரலங்கரித்தார்
வேறு
497 செங்கமலத்திற்றிசைமுகன்மாயன்றேவர்கள்சித்தர்கண்முனிவர்
புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப்போற்றிநின்றிசைத்திடப்புகழ்யாழ்
மங்கலகீதவிதத்துடன்பாடிமலர்தலையுலகமங்கையரோ
டங்கண்வானத்தினழகொழுகியநல்லரம்பையர்நாடகநடிப்ப
498 திண்டிறற்குலவுதிக்குபாலகர்தந்திசைதொறுஞ்சேர்ந்துசேவிப்பத்
தண்டலில்குண்டோதரனகல்வானிற்றயங்குவெண்மதிக்குடைநிழற்ற
வெண்டிசைவிளக்குமிருசுடர்மருங்கினிணைமணிச்சாமரையிரட்ட
விண்டலந்தயங்குவெள்ளிமால்வரைபோல்விடைக்கொடிமீதுநின்றலங்க
499 பண்டருவிபஞ்சிபாடிடுமொலியும்பல்லியந்துவைத்திடுமொலியுங்
கொண்டல்சேர்கூந்தற்குங்குமக்கொங்கைக்கொடியிடைப்பிடிநடைத்தீஞ்சொற்
றொண்டையங்கனிவாய்த்தோகையர்நடிக்குந்துணைப்பதாம்புயச்சிலம்பொலியு
மெண்டிசாமுகத்துமண்டர்வானகத்துமெங்கணுஞ்சென்றெதிரேற
500 திண்டிறற்குலவுதீர்த்தர்களேத்துந்திருவருணந்தியெம்பெருமான்
மண்டுகாதலிற்சேர்வானவர்செம்பொன்மணிமுடிதருபிரம்பொலியும்
பண்டருவேதப்பாடலினொலியும் பன்னுதேவாரத்தினொலியுங்
கொண்டசீர்வானத்தண்டகூடத்தின்கொழுந்துவிட்டதுபடர்ந்தேற
501 இன்னனவளஞ்சேரிந்திரசெல்வத்திலங்கியவீதியினலங்கூர்
பொன்னலந்தயங்குமின்னனையிடங்கொள்பூவணமேவியபெருமான்
பன்னருஞ்சிகரபந்தியின்மிக்கபைம்பொன்மால்வரையெனச்சோதி
மன்னியவலங்காரந்திகழ்ந்தோங்குமணிநெடுந்தேரினில்வந்தார்
வேறு
502 இந்தநல்விழாவணியிடத்தெயினர்சூழ
வந்தமலரோனுநெடுமாலுமறியாத
வெந்தைபெருமானுமிகுமின்னருளினாலே
சிந்தைமகிழ்வோடுநனிசென்றுதரிசித்தான்
503 நாதமுயர்விந்துவினுநாடரியநம்பன்
மேதகுவிணோருடனல்வீதிகள்கடந்தே
பூதலமெலாங்குலவுபொற்சுவருடுத்த
கோதின்மணிசோதிவிடுகோயிலிடைபுக்கான்
504 காதலுடன்மேவுகனகங்களவுகொள்வா
னேதுநிகழ்காலமெனவெண்ணிமனனூடே
யோதுமவணீடுதனியூசலெனவந்த
வீதிதனினின்றுவிளையாடல்புரிகின்றான்
505 பண்டறிவருங்கொடியபாதகனைவீதி
கண்டிடுபவத்தையுறுகாதலுடன்வெய்யோன்
றெண்டிரைகொடீர்த்தமதுசென்றொழிவனென்றுட்
கொண்டனனெனக்குடகடற்கிடைகுளித்தான்
506 முண்டகமிலங்குமணிகுண்டமதின்மூழ்கி
யண்டர்தொழுமுத்தியினடைந்திடுவனந்தோ
கண்டிடுவமென்றுவருகாட்சியதுமான
மண்டலம்விளங்குமதிவானவனுதித்தான்
வேறு
507 ஆங்கவனரையிருள்யாமத்தன்னதன்
பாங்குறுகொலைபுரிபரிசனங்களை
யீங்குநீர்வம்மினென்றெடுத்துவல்லைகூய்
நீங்கருகாதலானிகழ்த்தன்மேயினான்
508 நிகழ்த்தலொன்றுடையன்யானீவிர்கேண்மெனா
வுகப்புடன்யாமெலாமொருங்குகூடியே
புகழ்ச்சியினீடியபுரவலன்மனை
மிகுத்தநற்றனங்கொடுமீண்டுசெல்குவோம்
509 என்றவனியம்பலுமெயினர்நன்றெனா
வென்றிவேல்வேந்தனன்மனையின்மேவியே
தன்றனியிலக்கநேர்தபனியங்கொடு
மன்றல்சேர்மலர்த்திருவாயினண்ணினார்
510 கடைத்தலைவாயில்காவலர்கள்கண்ணுறீஇ
யடுத்தவர்யாரெனாவையுற்றோர்சில
ரிடிக்குரலெனவதிர்த்தெழுந்துசீறியே
படைத்தலைவீரர்கள்படையின்மூண்டனர்
511 மூண்டனர்முறைமுறைமுடுகிமுன்னரே
மாண்டகுதிறற்படைமானவேடருங்
காண்டகுகனற்பொறிகண்கள்சிந்தவே
யேண்டிகழ்வாயிலினிடைக்கணீண்டினார்
வேறு
512 இடங்கொள்வானகத்தெறிகுவரேற்றுவரீர்ப்பர்
தொடர்ந்துசுற்றுவர்பற்றுவரடுத்துமெய்துளைப்பர்
படர்ந்துசெல்குவர்மீள்குவர்படைக்கலன்வழங்கிக்
கொடுஞ்சமர்த்தொழில்புரிகுவர்குருதிநீர்குளிப்பார்
513 தெரிவருந்திறற்சாரிகைகறங்கெனத்திரிவர்
குருதிவாய்தொறுங்கொப்பளித்திடவுயிர்குறைப்பர்
வெருவியோடுவர்மீள்குவர்வெள்குறாதெதிர்ந்து
பொருவர்மீண்டுமங்கிருவருந்தோள்புடைத்தெதிர்ப்பார்
வேறு
514 எதிர்த்திருவிசும்பிடையெறிந்திடுவருள்ளங்
கொதித்திடுவர்செங்கைகொடுகுத்திடுவர்வெண்பல்
லுதிர்த்திடுவரென்பினையொடித்திடுவர்நெஞ்சின்
மிதித்துயிர்பதைத்திடவிதத்துடனடிப்பார்
515 தண்டியெதிர்சென்றுசிலர்தாடலைதுணிப்பார்
கண்டமதனைச்சிலர்கள்கண்டமதுசெய்வார்
மண்டமர்புரிந்துசிலர்வன்கரமறுப்பார்
துண்டமதனைச்சிலர்கடுண்டமதுசெய்வார்
516 ஏவரும்வெலற்கரியவீறில்பெருவாயிற்
காவலர்தமிற்சிலரையாயிடைகலந்தே
கூவிளிகொளக்கொலைஞர்கோறல்புரிகின்றார்
மேவும்விதிவந்தணையில்வெல்லவௌர்வல்லார்
வேறு
517 வீடரிதாயவெம்போர்விளைத்தலும்வேந்தன்சேர்ந்த
நீடியமணிமுகப்புநிரைதொறுமிடிந்தநீள்வான்
கூடியமணிசேர்செம்பொற்கோபுரநிலைகுலைந்த
பீடுறுகின்றமாடப்பித்திகைபிறழ்ந்ததன்றே
518 பொருவின்மாளிகையிடத்தும்பூம்பொழிலிடத்தும்பொங்கி
யருவிபாயமுதவெள்ளத்தகலிருவிசும்பிற்றோன்றுந்
தருணவெண்ணிலாக்கொழிக்குஞ்சந்திரகாந்தச்சோதி
பரவியவிடங்களெங்கும்பரந்தனகுருதிநீத்தம்
519 அந்நிலைதன்னின்மிக்கவன்னதொன்னகரினாப்பண்
கன்னவிறடந்தோள்வீரர்கம்பலைசெவிமடுப்ப
மின்னுவெம்படைஞர்யாரும்வெகுண்டனர்விரைவினீண்டி
மன்னியபுரிசைவாயில்வந்தனர்வளைந்துகொண்டார்
520 ஆங்கவர்வெருவியெங்ஙனடைகுவமென்றுகொண்டு
நீங்கரும்வாயினீங்கிநீள்கடைப்புறத்துப்போந்து
தாங்கரும்வெகுளிவீரர்தாந்துரத்திடத்தகைத்துத்
தீங்கறுமணிகுண்டத்திற்சென்றனர்திகைத்துவீழ்ந்தார்
521 இப்பெரும்புனனமக்கிங்கிருங்கதிதருமென்றேயோ
வப்பெரும்பயத்தாலந்தோவந்தநீர்குளித்தோர்யாரு
மெய்ப்படநாடியங்கண்மீண்டெழுந்திலர்களம்மா
தப்பறவக்கணத்திற்றாமுயிர்பரிந்தாரன்றே
வேறு
522 நெற்றிதருகண்ணர்திருநீறிலகுமெய்யர்
நற்சடிலசேகரர்கணான்குதடந்தோளார்
பெற்றமதுகைத்துவருபிஞ்சகனையன்றி
மற்றுமொர்தெய்வந்தனைமனத்தறிகிலாதோர்
523 சோதிவிடுகின்றதிரிசூலர்சிவதூதர்
மாதிரம்விளங்குகதிர்மன்னுமணிதுன்னுங்
கோதில்பல்விமானமவைகொண்டவண்விரைந்து
நாதனருளான்மகிழ்வினண்ணினர்கண்மன்னோ
524 தங்கொளியின்மிக்குயர்தனித்தனிவிமானத்
தங்கவரையந்நிலையினன்பினவைமேல்கொண்
டெங்கள்பெருமானுரியவின்னருளினேயோ
புங்கவர்தொழச்சிவபுரத்தினிடைபுக்கார்
525 செப்புமவரிப்புடவிதேடவருபாவ
மப்புனலொளித்ததினகற்றினர்களென்னா
வொப்பரியதீர்த்தமெனவோர்ந்துலகமாடி
னெப்பவமுமாற்றுமெனயாமொழிவதென்னோ
526 ஆதலினியாவர்களுமாதரவினென்றும்
வேதியர்தமக்குநிதிவேண்டியதொர்தானங்
கோதறவளித்துமணிகுண்டமதின்மூழ்கிற்
றீதில்சிவலோகமதுசென்றடைவரன்றே
527 பூர்வமுறுபூவணபுராணகதைதன்னைப்
பேர்பெறவழுத்துமுயர்பிரமகைவருத்தத்
தோர்வரியபேருலகுரைக்குமெழுபான்மூன்
றாரறிவளிக்குமத்தியாயமிமூதம்மா
வேறு
528 பரிதிமடுவுறுபான்மையைநாளுமேபரவையுடைதிகழ்பார்தனிலோதுவோ
ரொருமையுடன்மனனூடதைநாடுவோருரியசெவிநுகரூனமின்மேன்மையோர்
கருணையுறுமிகுகாமருசீர்கொடேகருதியறைகுநர்பூசைசெய்காதலோர்
மருவுமுருவசிமாமுலைமீதரோவருடமொருபதினாயிரம்வாழ்வரே
துன்மனன்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 528
*****
ஐந்தாவது
தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்
529 ஓதுநன்பலமாயுகமுறுவதாய்க்கேட்போர்
பாதகங்கணோய்பற்றாத்துடைப்பதாய்ப்பின்னுங்
காதல்கூர் மணிகன்னிகை மன்னுமோர்காதை
சூதமாதவன்சுவுனககேளெனச் சொல்வான்
530 தெக்கிணந்தருதிக்கினிற்றிரைபுரள்பொருநைத்
தக்கதீரநீடலைமைசேர்தாபதர்நெருங்குந்
தொக்கவஞ்சிறைப்புட்குலந்துதைந்தபூம்பொதும்பர்
மிக்கதோர்தலம்வேணுநல்வனமெனவிளங்கும்
531 குலவுமவ்வனங்கொண்டதோர்குடதிசைமருங்கி
னலகில்பல்புகழடைந்தகோலாகலமெனும்பேர்
நிலவுமக்கிராமத்தினோர்நேரிலந்தணனீ
டுலகம்யாவையுமொருங்குநின்றேத்திடவுதித்தான்
532 அந்தணர்க்கெலாந்தலைமையாயங்கமோராறுந்
தந்திடும்புகழ்தரித்தநற்சதுர்மறையுணர்ந்தோன்
முந்துகின்றவெண்ணெண்கலைமுழுதுணர்மேலோன்
சிந்தையிற்றிருவஞ்செழுத்தடைவினிற்செபிப்போன்
533 நித்தநன்னியமத்தொழினிரப்பிடுநெறியோன்
புத்திரர்தரும்பவுத்திரர்பொருவருகிளைஞர்
மைத்தடங்கண்மங்கையரொடும்வாழுநமென்னுஞ்
சித்தநன்குணர்வேதசன்மாவெனத்திகழ்வோன்
534 செங்கணேறெனத்தினந் தொறுந்தினந்தொறும் வளர்ந்து
கொங்குலாங்குழற்கோதையர்மனங்களிகூர்ந்து
துங்கமேவியகாமனேயெனவெழிறுதைந்து
மங்கலந்தருவடதிசைக்கிறையெனவாழ்நாள்
535 வந்தியாவருமணங்கமழ்மலர்ப்பதமிறைஞ்ச
விந்தமாநிலத்திரும்பொருள் யாவையுநுகர்ந்து
முந்தையூழ்வினைதிறம்பலான்மூப்புவந்தடைய
வந்தநான்மறையந்தணனாருயிர்துறந்தான்
536 அந்தவந்தணன்றந்தருளருமறைக்குலத்தோ
னிந்துவென்னநாடொறும்வளரெழிற்கலைமதியோன்
முந்தைநான்மறைசந்ததமுழங்கிடும்வாயான்
றந்தையிற்றிகழ்தருமஞ்ஞனென்னுநாமத்தோன்
537 சாற்றுகின்றவத்தருமஞ்ஞன்றனைத்தருதந்தைக்
கேற்றநூல்விதியிருக்கடனியாவையுமுடித்தே
நாற்றடந்திசையோடியனானிலமெங்கும்
போற்றுகங்கையிற்போதுவான்புந்தியிற்றுணிந்தான்
538 அத்தன்மெய்த்தகுமங்கம்யாவுந்தெரிந்தோர்கும்
பத்தமைத்துநற்படாங்கொடுபுதைத்துவாயரக்கின்
முத்திரைக்குறியிட்டுயர்முத்திதானல்கு
முத்தரத்திசைகொண்டுமாணாக்கனோடுற்றான்
539 வங்கவாரிதிவளாகத்துமருவியாங்காங்குத்
தங்குமாதவர்செங்கையிற்றானநன்கீந்து
பொங்குசீதநற்புண்ணியதீர்த்தங்களாடி
யங்கயற்கண்ணிபங்கன்மேவாலவாயடைந்தான்
540 அடைந்துமாநதியாடியேயருங்குலப்பிதிர்க
ளுடன்கலந்திடுமுனிவர்கடேவர்கட்குற்ற
கடன்கழித்துறுகண்ணிலர்கதியிலர்தரள
வடங்கொள்பூணணிமங்கையர்வனமுலையுண்போர்
541 விருத்தவேதியராதுலர்வேணவாவொழிய
வருத்தமேனியதழகுறவமைத்திடுஞ்சேதாப்
பெருத்தகாதன்மெய்த்தந்தைநற்பெரும்பதம்பெறுவான்
கருத்தனாகியாங்குதவியேகணிப்பருந்தானம்
542 வேணிமேன்மிளிர்வெண்ணிலாமிலைச்சியகூட
லேணுநாயகிதன்னைமுத்தினம்பணிந்தேத்திக்
காணுமாறரிதாகிய கடவுள்செம்பாகம்
பூணுலாமலைமங்கைசேர்பூவணமடைந்தான்
543 புடவிபோற்றுமப்பூவணங்கோயிலாக்கொண்ட
விடையுகைத்திடும் விண்ணவர்கோன்றனைவடுகக்
கடவுடன்பதங்கண்டுபின்கைகுவித்திறைஞ்சி
மடல்விரிந்தபூமாமணியோடையில்வந்தான்
வேறு
544 மண்டலம்புகழ்கொண்டமாமணிகுண்டநீரின்மணங்கமழ்
புண்டரீகமுநனையவிழ்ந்தபொதும்பர்நீடுசெய்பொழில்களு
மண்டராதியர்தானமும்புகலரியவாச்சிரமங்களும்
பண்டைநான்மறைபாடுமந்தணர்பழகிடுந்திகழ்கழகமும்
545 மன்னுமாச்சிரமத்தினிற்குநர்மாதவம்புரிமாட்சியும்
பன்னுநன்கலைபயிலுமந்தணர்பன்னசாலைகளும்பொறி
துன்னுமாமயிலாலவந்தெழுதூமமுந்தழலோமமுங்
கன்னல்வேடனைவென்றசவுநககண்டுகண்களிகொண்டனன்
546 சித்தநன்குதெவிட்டியாயிடைத்தேசுகால்வடுகேசனைச்
சுத்தமார்திலந்தூருவாக்கதைதுன்னுபூசைமுடித்துவந்
தத்திகும்பமகன்கரைக்கணமைத்தளித்தருளத்தனை
முத்திதானடைவிப்பவெய்துபுமோகமோடதின்மூழ்கினான்
547 மூழ்குமேல்வையினாழ்கடற்புனன்மொண்டுசூன்மழைபொழியவே
சூழ்தருந்திசைமாறிடும்படிதூவுமாலிகள்சிதறிநல்
வேழ்வியந்தணன்விசையெழுந்துசென்மிகுபதங்கடமிடறவத்
தாழ்தலத்திடைவீழ்தலுற்றதுசங்கரன்றிருவருளினால்
548 மிக்கவத்தடம்வீழ்தல்கண்டுளம்வெருவியோடியெடுத்தன
னக்கடத்தினினிட்டவங்கமனைத்துமக்கணமாய்மலர்
தக்கநற்சதபத்திரத்தொடுசார்ந்தவுற்பலமாகவே
தொக்கவன்பினிறைஞ்சியந்தணர்சூழலுற்றிவைசொல்லுவான்
549 அற்புதந்தனையென்சொல்கேன்மிகுமறவிர்காளரிதரிதரோ
பெற்றதாதைபிறங்கெலும்புபெருங்கடத்திலிருந்துதா
ளெற்றவிந்தவிலஞ்சிநாப்பணெழுந்துவீழந்தரவிந்தமோ
டுற்றபானலதாகயானொருவேனுமேதிருவுடைமையேன்
550 பாசமோசனதீர்த்தமென்பதுபண்டுகண்டதுகேட்டதாய்க்
காசிமாநகரத்தினும்மிதுகட்டுரைத்திடவொண்ணுமோ
பேசின்முன்னமருந்தவஞ்செய்பிதாக்களுங்கதிபெற்றனர்
பூசுராதிபர்போற்றுமிப்பதிபூர்வமாமிதுபுகலிலே
551 ஈதுமுன்னரிழைத்தமாதவமீண்டுகண்டனனாகவிப்
போதெனன்குலவாணரும்புகழ்பொற்பின்வந்துபொருந்தினா
ராதலாலடியேனுமுய்ந்தனனதிகசற்குருவிரதனா
னாதவேதமுனகாடைந்தனனென்றுநின்றுநடித்தனன்
552 இன்னதன்மையனிந்நிலத்தினினென்னின்மேலவரின்றெனா
வன்னவந்தணர்தம்மைநீங்கினனாலயந்தனையண்மியே
துன்னுநாகர்தலத்ததுநின்றுமொர்சோதிலிங்தாகியே
முன்னைநாளின்முளைத்தெழுந்தருண்மூர்த்தியைத் தொழுதேத்தினான்
வேறு
553 அருண்மேனிதரித்தருள்வாய்சரணமறிவுக்கறிவாமானேசரண
முரகாபரணாசரணஞ்சரணமொருமூவிலைவேற்கரனேசரணம்
பொருளேயடியார்புகலேசரணம்பூதப்படையாய்சரணஞ்சரணந்
திருமாலயனறிவரியாய்சரணந்திகழ்பாற்கரபுரவசிவனேசரணம்
554 கழைவேளையெரித்தருள்வாய்சரணங்கனகாசலவிற்கரனேசரணம்
பொழில்சேரநிறைந்தருள்வாய்சரணம்பூர்வந்தருபுண்ணியனேசரண
மொழியாவுலகமொளிப்பாய்சரணமொருவெஞ்சமனையுதைத்தாய்சரணஞ்
செழுநான்மறையின்முடிவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
555 ஒருமானிலகோருருவாய்சரணமோதுந்தொழிலைந்துடையாய்சரணம்
புரமூன்றெரிசெய்தருள்வாய்சரணம்பொருமால்விடைமேல்வருவாய்சரணம்
பெருகாதரவேபிரியாய்சரணம்பிறைவேணியனேசரணஞ்சரணந்
திரையார்புனல்சேர்சடையாய்சரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
556 அடைவார்வினைதிர்த்தருள்வாய்சரணமருளாலறியும்பொருளேசரணங்
கடல்சேர்விடமுண்டவனேசரணங்கமலன்றருகங்கையனேசரணஞ்
சுடர்சேர்சுடலைப்பொடிபூசிடுநற்சுகரூபமதையுடையாய்சரணஞ்
செடிசூழ்மிகுகற்பகநன்னிழலிற்றிகழ்பாற்கரபுரசிவனேசரணம்
557 மாயாவுருவாரமலாசரணமாலானவர்பாலேலாய்சரணந்
தாயாயுலகந்தருவாய்சரணந்தன்னடியார்கட்கருள்வாய்சரணம்
பேயோடாடும்பெருமான்சரணம்பிரிவருதிவ்வியவுருவாசரணந்
தீயேந்திய செங்கரனே சரணந்திகழ்பாற்கரபுரசிவனே சரணம்
558 பொருமதகரியுரிபோர்த்தாய்சரணம்பொதுவினினடமிடுபுனிதாசரணம்
வெருவரல்விடவருள்விகிர்தாசரணம்வேதபராயணநாதாசரண
மரியயனடிபரவமலாசரணமடல்விடைதருகொடியரனேசரணந்
திருமணியுமிழ்கட்செவியணிமகுடந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
559 பத்தர்விரும்புவரத்தினைநித்தம்பரிவான்மிகவுந்தருவாய்சரணம்
புத்திகொளுத்தமர்புந்திபுகுந்தவர்பூசனைகொண்டருளீசாசரணம்
தத்துவஞானமளிப்பாய்சரணஞ்சஞ்சிதபாசமறுப்பாய்சரணஞ்
சித்தியுமுத்தியுமிக்கருள்புரியுந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
560 அட்டகுணஞ்சேரமலாசரணமாதுலர்தம்மையளிப்பாய்சரண
மெட்டுருவாகியவிறைவாசரணமெங்குநிறைந்தருளெந்தாய்சரணங்
கட்டமுநோயுங்கவர்வாய்சரணங்கதியருள்பரபதமானாய்சரணஞ்
சிட்டர்தினந்தொழுந்தேவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
வேறு
561 என்றின்னனபன்னியிறைஞ்சுதலுமிமவானருளுமுமையாளிடமாம்
பின்றங்கியசெஞ்சடையெம்பெருமான்பெரிதுந்திருவுள்ளமலர்ந்தருளி
நின்றன்புமனத்துறுதருமஞ்ஞனேர்கண்டிடநல்விழிநல்கியரோ
வன்றங்கலராசனன்மாலறியாவத்தன்பரமுத்தியளித்தனனே
562 அந்தன்பரமுத்தியளித்தருளியமரும்பொழுதினருடங்கியநற்
சித்தங்களிகூர்செழுநான்மறைதேர்திகழ்ஞானசுகோதயமாதவர்காண்
முத்தந்திரைதத்தியதன்கரையின்மோதுங்கடல்சூழ்முதுபாருலக
மித்தன்மையையுனித்தர்மஞ்ஞனேத்துந்துதிபன்னிவியந்தனரால்
563 தருமஞ்ஞனைச்சந்ததமும்புகழ்வோர்சாமீபமதிற்றானெய்திடுவா
ரிருதஞ்செவிகொண்டிடுவோர்கையினல்லிலகும்பரமுத்தியையெய்திடுவார்
பரவுந்தரையிற்படர்கின்றிடுவோர்பரிவாலிவைபன்னினரேலவர்தா
முரைதங்குடல்வீடுறுகாலரன்வந்துறுதாரகமந்திரமோதுவனால்
வேறு
564 அங்கவருபதேசந்தனையுற்றேயரியவிமானத்துரிமையினேறிச்
சங்கரனருள்கூர்கிங்கரராவார்சரதமிதருள்வழிசெவியினிறைப்போர்
வெங்கனலாயிரம் வேள்வியர்வேள்விமேயநல்வாசபேயம்மோர்நூறு
பொங்குலகஞ்செய்தபுண்ணியநண்ணுவர்பொழில்புரிபாவமுமொழிகுவரன்றே
வேறு
565 பிரமகைவர்த்தமாம்பெரும்புராணத்திற்
றருமஞ்ஞன்காதையத்தியாயஞ்சாற்றிடி
னருமையிங்கெழுபமூதந்தநாலதிற்
கரைதருசவுனககருத்திற்காண்டியால்
வேறு
566 தருணமெய்ச்செழுந்தழல்வளர்த்ததர்மஞ்ஞனுக்குநற்கதியளித்தநீள்
பரிதிதொட்டபைந்தடமதுற்றசீர்ப்பரவைசுற்றிடும்படியிடத்தரோ
கருதியிற்பெருங்கதைபடித்துளோர்கருணையிற்றினஞ்செவிநிறைத்துளோ
ரருணலத்தினங்கணனுருக்கொடேயரனிடத்துவந்தருகிருப்பரே
தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 566
*****