தி.சுபாஷிணி

மரணம்

மீளா மயக்கம்

மரணம்

மதுரமானது

மன்னிக்கும், அண்ணாவிற்கும்

மதுரத்தின் கணவனுக்கு

விடுதலையானது

மரணம்

ஆஹூதியானது அண்ணன்

அரங்கராஜனுக்குக்

காதலின் முடிவானது

காயத்திரியின் கணவனுக்கு

காயங்கள்

காத்திருக்கும் நமக்கோ!

பச்சை வேதனை

அடுத்தடுத்த எண்ணிக்கையில்

இறத்தல்

இயல்பாகி விட்டது

இழப்பின் பாதிப்பு

இயற்கையாகி விட

மரணம்

மற்றுமொரு சடங்காகி விட

மனிதம்

மரணமாகிப் போமா!

 

படத்திற்கு நன்றி: http://palaivanarojakal.blogspot.com/2010/04/blog-post.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *