SAMEER ன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது

0
24 நவம்பர் 2011. மைக்ரோவேவ் தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் SAMEER(Society for Applied Electronics Engineering and Research) சென்னை தரமணியில் இயங்கி வருகின்றது.இதன் மும்பை மற்றும் சென்னை முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு  செய்துள்ளது.
 
இந்நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பையின் முன்னாள் இயக்குநர்கள் இருவரும் ஒருஅமெரிக்க நிறுவனத்தின் துணை இயக்குநருடன் இணைந்து, 2005ம் ஆண்டு நிறுவனத்திற்காககட்டடம் கட்டிய வகையில் இந்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதாக சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளது.
 
இது தொடர்பாக சிபிஐ சென்னை மற்றும் மும்பையில் இந்நிறுவனத்தின் அலுவலகங்களில்சோதனை நடத்தியது.  வழக்கிற்கு ஆதாரமாகக் கருதப்படும் பல ஆவணங்களைக்கைப்பற்றியுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *