கூண்டுக்கிளியுடன்
செண்பக ஜெகதீசன்
சுதந்திரத்தைத் துறந்து
கிளி
மனிதனின் மாய வலையில்
மாட்டிக் கொண்டது
கூண்டுக்கிளியாய்;
கூப்பிட்ட குரலுக்கு
ஓடி வருவதாய்..
தரும் ஓரிரண்டு
தானியமணிகளுக்காய்..
கிளி ஜோசியமாம்…!
அந்தக் கிளியுடன்,
அதை
அடிமையாக்கியவன்,
வைத்துப் பிழைப்பவன்,
வந்து
வருங்காலம் கேட்பவன்..
இந்த நால்வருக்கும்
இன்னும் வரவில்லையே
நல்ல காலம்…!
படத்திற்கு நன்றி: http://maduraidiary.blogspot.com/2007/10/parrot-astrology-is-expensive.html