நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (4)
தி.சுபாஷிணி
ஆழிநீரை மழையாய்ப் பொழியச் செய்தாய்!
அலங்காரம் தவிர்த்து அறுசுவை நீக்கி
செய்யாதன செய்யாது சொல்லாதன சொல்லாது
கேட்போர்க்கும் கேளாதார்க்கும் உறுபசி நீக்கத்
தொடங்கிவிட்டோம்! எழுவாயே ஆட்கொள்ள நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4173
கடலிலிருந்து நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாக மாறி
திரும்பவும் இம் மண்ணிற்கு மழையாகப் பொழிகிறது என்ற
விஞ்ஞானத்தை 2000 வருடங்களுக்கு முன்பே வள்ளுவர்
” நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்” என்ற குறளில் சொல்லியுள்ளார்.
பின்னர் வந்த ஆண்டாளும் அதே விஞ்ஞானத்தை தன்
மழைப் பாட்டான “ஆழி மழைக் கண்ணா” பாடலிலும்,
ஆண்டாளை அடியொற்றி மாணிக்கவாசகர் தன் மழைப்
பாட்டான ” முன் இக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்”
என்ற பாடலிலும் சொல்லியுள்ளது தமிழர்கள் விஞ்ஞானத்தில்
எவ்வளவு திறம்பட விளங்கியுள்ளார்கள் என்பது வியக்க
வைக்கிறது!
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.