மழைக்குப் பின்
செண்பக ஜெகதீசன்
தென்னங்கீற்று
இன்னும் கண்ணீர் விடுகிறதே-
மழை போதும் என்றா,
போதாது என்றா!
சின்னப்பிள்ளை
சிரித்து அழைக்கிறது-
மழையே மழையே வா..
பெருசுகள் பேசிக்கொள்கின்றன-
போன வருச மழைதான்
பெருமழை..
பள்ளிப் பிள்ளைக்கு
ஏமாற்றம்-
அடடா லீவு போச்சே..
அம்மாவின் நம்பிக்கை-
ஈரத்துணிகளை
எடுத்திடலாம் காயப் போட்டு..
அப்பாவின் கவலை-
கடன்காரன் வந்திடுவானே…!
கவலையில்லாமல்
கலகலப்பாய்ச் சிரித்துத்
தலை காட்டுகிறான் கதிரவன்…!
படத்திற்கு நன்றி: http://grace.allpurposeguru.com/2010/01/strange-instruction-from-scripture-praise-god-in-suffering/
அவரவர் கவலை அவருக்கு. ஆனால் அனைவருக்காகவும் சேர்ந்து கவலைப்பட கவிஞனால் மட்டுமே முடியும்.