கொடியதாய்
செண்பக ஜெகதீசன்
வீசும் தென்றலாய்..
வாசம் கொணர்வதாய்..
வனப்பு சேர்ப்பதாய்..
காதல் வளர்ப்பதாய்..
கவிதை தருவதாய்…
காற்று கொடியது-
சூறையாடும் புயலாய்..
சுழன்று அடிப்பதாய்..
இயற்கை வனப்புடன்
செயற்கை அழகையும்
சேர்த்தே அழிப்பதாய்..
இருக்கும் உயிர்க்கெலாம்
எமனாய் வருவதாய்…
ஓ,
இதுதான் இறைவனின்
இன்னொரு முகமோ…!
தானே எல்லாம் என்பவனாலும்
தடுக்க முடியாததுதான்
‘தானே’…!
படத்திற்கு நன்றி: http://yarlosai.com/?p=21217