செண்பக ஜெகதீசன்
இரவு அழுதிருக்கிறது,
என்ன கவலையோ!..
காலைக் கதிரவன் வந்து
கண்ணீர் துடைக்கிறது..
கலங்கவில்லை.
காலடியில் புல்லெல்லாம்-
பல்லைக் காட்டுகிறது
பனித்துளியைத்
தலையில் தாங்கி…!
படத்திற்கு நன்றி: http://www.sciencephoto.com/media/162428/view
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…