நிஜம்
திருவாரூர் ரேவதி
சமுதாயச் சலசலப்பில்
திறந்த விழிகளுக்குள்
உறங்கும் மனது,
மூடிய விழிகளில்
உறக்கம் தொலைக்கும்
சலசலக்கும் மனது,
சட்டென விலகும்
நட்பும் உறவும்
நஞ்சாய்த் தோன்றும்
நிஜவுலகில் நிலையாய்
வாழ நெஞ்சுக்குத்
தெளிவில்லை.
படத்திற்கு நன்றி:http://www.free-stockphotos.com/download-free-heart-with-flowers-pictures