செழியன்

பெண்ணே !
வில்  போன்ற நெற்றி …அதில்
விண்ணில் இருக்கும்  நிலவு  போல்
வட்டமான …….
அந்த  வண்ண  குங்குமப்  பொட்டு ……

மையுண்ட  விழிகளில்
கயல்  துள்ளுவதாக சொன்னார்கள்
காவியத்தில்  கவிஞர்கள்  .
மனமென்னும்  தூண்டிலையே
முறிக்கும்
அந்த  மையுண்ட  விழிகள் …….

மஞ்சள்  பூசியே ..
மாசு -மரு  அற்ற
மங்களகரமான .
அந்த  மஞ்சள்  முகம்……..

காதோரம்  லோலாக்கு ..
கடக்கும்போதும் ..
கழுத்தைத்  திருப்பும்போதும்
கண்களுக்கு காட்டும் பரதம்
கண்களை இமைக்க  மறக்க வைக்குமே
அந்த  லோலாக்கு ……
வழியும்  கூந்தலை
வகிடு  எடுத்து -வாரி பின்னி
இடை தொடும்
ஜடை  போட்டு
இறுதியில் …
பட்டு  குஞ்சம்  கட்டி
நடக்கும் போதெல்லாம்
நாட்டியம்  ஆடுமே
நல்  முத்து வைத்து  கட்டிய
அந்த  வண்ணக்  குஞ்சம் …….

வாழைத்  தண்டு  கைகளில்
வண்ணங்களில்   வளையல்கள்
கைகளை  அசைக்கும்போது …..
ஒலிக்குமே   வளையோசை …
நகைப்பது ..நீயா ? அல்ல   வளையல்களா?
கேட்க  சொல்லுமே ..
அந்த  வளையல்கள் …..
பட்டுப்  பாவாடை -சட்டை  போட்டு
தாவணி கட்டி
நடக்கும் போதெல்லாம்
நலம் விசாரிப்பது போல
சரக் ..சரக் ….என   
சரணம்  பாடுமே …அந்த  பட்டுப் பாவாடை
அதற்கு .
எசப் பாட்டு  பாடுமே
சலக்   சலக்   என
கணுக்கால்களை    கட்டிக்  கொண்டு இருக்குமே
அந்த  கொலுசு …….
இவைகளோடு   
நீ …நடந்து  வரும்போது ..
தேவதையாகத்    தெரிந்தாய்.
இன்று …..
இவைகள்  தேவையில்லை  என  உதிர்த்து  விட்டாயோ .
இனி  …..தேவதையை   
தேடத்தான்  வேண்டுமோ ?
அல்ல
கனவில்தான்   காண வேண்டுமோ ?
 

http://www.maebag.com/Content.php?Code=15506&Param=Product

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தேவதையை ……தேடுகிறேன்

  1. கவிதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் கொடுத்து அதிர வைத்து விட்டீரே…நியாயமா?

  2. DINAKARAN  SIR……SARIYAKA SONNIRKAL…MUDICHAI  AVIZHKKAAVITTAALUM  PARAVAAILLAI .ARUKKAAMAL IRUNTHAL  SARI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *