தேவதையை ……தேடுகிறேன்
பெண்ணே !
வில் போன்ற நெற்றி …அதில்
விண்ணில் இருக்கும் நிலவு போல்
வட்டமான …….
அந்த வண்ண குங்குமப் பொட்டு ……
மையுண்ட விழிகளில்
கயல் துள்ளுவதாக சொன்னார்கள்
காவியத்தில் கவிஞர்கள் .
மனமென்னும் தூண்டிலையே
முறிக்கும்
அந்த மையுண்ட விழிகள் …….
மஞ்சள் பூசியே ..
மாசு -மரு அற்ற
மங்களகரமான .
அந்த மஞ்சள் முகம்……..
காதோரம் லோலாக்கு ..
கடக்கும்போதும் ..
கழுத்தைத் திருப்பும்போதும்
கண்களுக்கு காட்டும் பரதம்
கண்களை இமைக்க மறக்க வைக்குமே
அந்த லோலாக்கு ……
வழியும் கூந்தலை
வகிடு எடுத்து -வாரி பின்னி
இடை தொடும்
ஜடை போட்டு
இறுதியில் …
பட்டு குஞ்சம் கட்டி
நடக்கும் போதெல்லாம்
நாட்டியம் ஆடுமே
நல் முத்து வைத்து கட்டிய
அந்த வண்ணக் குஞ்சம் …….
வாழைத் தண்டு கைகளில்
வண்ணங்களில் வளையல்கள்
கைகளை அசைக்கும்போது …..
ஒலிக்குமே வளையோசை …
நகைப்பது ..நீயா ? அல்ல வளையல்களா?
கேட்க சொல்லுமே ..
அந்த வளையல்கள் …..
பட்டுப் பாவாடை -சட்டை போட்டு
தாவணி கட்டி
நடக்கும் போதெல்லாம்
நலம் விசாரிப்பது போல
சரக் ..சரக் ….என
சரணம் பாடுமே …அந்த பட்டுப் பாவாடை
அதற்கு .
எசப் பாட்டு பாடுமே
சலக் சலக் என
கணுக்கால்களை கட்டிக் கொண்டு இருக்குமே
அந்த கொலுசு …….
இவைகளோடு
நீ …நடந்து வரும்போது ..
தேவதையாகத் தெரிந்தாய்.
இன்று …..
இவைகள் தேவையில்லை என உதிர்த்து விட்டாயோ .
இனி …..தேவதையை
தேடத்தான் வேண்டுமோ ?
அல்ல
கனவில்தான் காண வேண்டுமோ ?
http://www.maebag.com/Content.php?Code=15506&Param=Product
கவிதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் கொடுத்து அதிர வைத்து விட்டீரே…நியாயமா?
arumai sir……..
DINAKARAN SIR……SARIYAKA SONNIRKAL…MUDICHAI AVIZHKKAAVITTAALUM PARAVAAILLAI .ARUKKAAMAL IRUNTHAL SARI.