செண்பக ஜெகதீசன்

இனம்பிரித்துப் படைக்கவில்லை
இறைவன்..

மனிதன்தான்
முகமூடிகள் பலவாய்
மாட்டிக்கொண்டே
மாற்றிவிட்டான் தன்னைத்தானே-
மதமாய்..சாதியாய்..
மனிதரில் உயர்வு தாழ்வாய்..

சுயநலம்தான்,
சுயமாய்ச் சிந்திக்கவிடாமல்
சீரழிக்கிறது இவனை..

சமப்படுத்துதல் என்பது
சாத்தியமா…!

ஏப்போதும் சந்தேகம் மனிதனுக்கு,
இருக்கிறானா
இறைவன் என்று..

இப்போது,
சரிப்படுத்த அவன்தான்
வரவேண்டும்..
வருவானா அவன்தான்…!    

படத்துக்கு நன்றி

             

http://www.dreamstime.com/royalty-free-stock-image-dark-face-mask-image5516246 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *