தாமரைகளே !…….தளர வேண்டாம்
பருவ குளத்தில்
பூத்திருக்கும்
இந்த தாமரையை ….
பார்த்து ..பார்த்து
செல்கின்றனர் …பறிக்காமலேயே
வறுமை சேற்றில்
அது இருக்கிறதாம் .
வரதட்சணை பாலம்
இருந்தால்தான்
வருவார்களாம் அதனிடம் .
தாமரைகளே ! தளரவேண்டாம் .
உம்மை பறிக்கும்
காலம் தொலைவில் இல்லை .
பறிக்காமலேயே ,,
உங்களை பார்த்து கொண்டிருக்க
ஆண்கள் ஒன்றும்
உங்களை போல
பொறுமைசாலிகள் அல்ல .
படத்திற்கு நன்றி
http://www.naturecultures.com/0020.php
அய்யா..ஒரு உண்மையை இங்கு சொல்ல ஆசைப் படுகிறேன்.
ஒரு ஆணின் பின்னால் ஒரு பெண் (அம்மா அல்லது அக்கா) இருந்து கொண்டு அந்த
வரதட்சணை பாலத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறாள், என்பதுதான் யதார்த்த உண்மை.