என் வீட்டு கொலு
விசாலம்
நவராத்திரி கொலு வந்தது,
பத்துநாட்களும் சுண்டல் விருந்து.
பாதி அறையை நிரப்பும் படிகள்,
பல வித பொம்மைகள் அமரும் படிகள்.
முத்தேவிகள் அங்கு அமரும் இடம்,
சிருஷ்டியின் பொருட்கள் காணும் இடம்.
மரப்பாச்சியுடன் முதல் படி ஆரம்பம்,
மாவிலையுடன் கலசமும் நிரம்பும்.
தசாவதாரத்தின் அழகான வரிசை,
நாதஸ்வரம் செட் ஒலிக்கும் இசை.
கிளிகள் மயில்களின் ஜோடி பார்க்கலாம்,
மான்கள், யானைகளின் ஜோடியும் ரசிக்கலாம்.
காந்தி, நேரு, விவேகானந்தர் அங்கே,
நேதாஜி சுபாஷின் கம்பீரத்தோற்றம் அங்கே.
கீழ்ப்படியில் செட்டியார் கடையும் உண்டு,
இடுப்பை அசைக்கும் பொம்மையும் உண்டு.
மணப்பெண் மாப்பிள்ளை கல்யாணம் காணலாம்,
கோபத்துடன் சிலம்புடன் கண்ணகி காணலாம்.
கொலுப்படி முடிய வண்ணக் கோலமும் உண்டு,
அழகாக ஒளி விடும் குத்துவிளக்கும் உண்டு.
லிங்கத்தைத் தழுவும் மார்க்கண்டேயன்,
அவன் மேல் பாசவலை வீசும் யமதர்ம ராஜன்.
ஓரத்தில் பழனி மலை முருகனும் உண்டு,
அதில் ஏறும் காவடிகளும் உண்டு.
முதியோர் இல்லம் என் கை வரிசை,
தட்டுவோம் இந்த வருடம் பரிசை !!!
படத்திற்கு நன்றி
கொலுவைப் போலவே கவிதையும் கொள்ளை அழகு !