தேவாரத் தலங்கள் – மாந்துறை
நூ த லோகசுந்தர முதலி
மயிலை
இக்குறுத் தொடரில் திருச்சி சமயபுரம் அருகு முதற்கண் பிடவூர் ஊற்றத்தூர் என இரு வைப்புத் தலங்களைக் கண்டோம். பின்பு திருச்சி மாநகருக்கு வடகிழக்கே காவிரி-கொள்ளிடம் (தோல்கேட்) கடந்து வடக்காக சமயபுரம் செல்லாமல் கிழக்காக லால்குடிக்கு பிறிந்து செல்லும பெருவழியில் 5 கி மீ சென்றால் காணும் மாந்துறை எனும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலத்தினைக் காணலாம். இருந்தும் செலவுவழி பொருத்தமாக அமைய நேராக மேலும் 2 கிமீ கிழக்கு திருத்தவத்துறை என தேவாரம் குறிக்கும் லாலல்குடி வைப்புத் தலத்தினைக் வழிபட்டோம் பிறகு அதற்கு மேலும் 5 கிமீ கிழக்கமைந்த அன்பிலுளள்ள ஆலந்துறை எனும் பாடல் பெற்றத்தலத்தினையும் கண்டு இப்போது கடைசியாக திருச்சி திரும்பும் முன்பு இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்
இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகைப் மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.
வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.
மேலும்
திரையார்புனல் கெடில வீரட்டமும் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையார் அருவிசூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனல் ஒழுகு காவிரிசூழ் கடம்பந் துறை உறைவார் காப்புக்களே 6.7.4
அப்பரடிகள் தேவாரம்-திருவீரட்டானம்-காப்புத்திருத்தாண்டகம்
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3
சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை
ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாட இந்தப் பாய் இருள்கண்-சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்(து) உறங்கா புள் 11.295
சேரமான் பெருமான் பாசுரம்- திருவாரூர் மும்மணிக்கோவை 26
என வரும் திருமுறைப்படல்களிலும் மாந்துறை / திருமாந்துறை என இரு தலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவைப்பற்றி வேறு துணைக் குறிப்புகள்/முன்அடை/பின்அடை ஏதும் காணாமையால் இவை வேறு வைப்புத் தலங்களாகவும் கொள்ளலாம்.
நன்காய்ந்த பின்பே பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தரின் வழிபாட்டுச் செலவு பற்றி விளக்குங்கால்
கஞ்சனூர் ஆண்ட தம்கோவைக் கண்உற்று இறைஞ்சி முன்போந்து
மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 6.1.293
என கூறுகிறார்
இங்கு ஒரு மாந்துறைதனை காட்டுவதன்றி அதற்கு பதிகம் பாடி உள்ளதாகவும் கூறுகின்றார். “மஞ்சணி மதில் சூழ்ந்த” என்பதால் குறைந்தது சேக்கிழார் காலமாகிய 13 ம் நூற்றாண்டில் இருந்துள்ள ஓர் கோயில் பெறப்படுகின்றது. இஃது தற்காலத்தில் போற்றுதலுடன் விளங்கும் சூரியனார் கோயிலிலிருந்து சிறிது துரத்தே அமைந்துள்ளது என்கின்றனர். சம்பந்தர் பதிகப் பாடல்களில் காணும் விளக்கங்கள்படி அது ஓர் அகண்ட காவேரிக் கரையில்தான் இருக்க வேண்டும் அப்பண்பு இக்கஞ்சனூர் மங்கலக்குடி இடையுள்ளதற்கு சிறிதும் பொருந்தாது.சேக்கிழார் காலத்திருந்து பின் தொலைந்து பட்ட ஓர் பதிகமாவதற்கு வாய்ப் மிகக்குறைவே. ஆக இதனில் ஏதோ ஓர் கருத்து வைப்பினில் முரண்பாடுள்ளது.
ஆனால், நம் வடகரை மாந்துறை பற்றி பேசுங்கால் சேக்கிழார் மிகச் சரியாகவே சம்பந்தர் பதிக 6வது பாடலில் குறிக்கப்பட்ட சூரிய சந்திரர் வழிபாட்டினை காட்டுவதால் பாடல்பெற்ற வடகரை மாந்துறை பற்றி யாதொரு ஐயமுமில்லை
மேலும்
திருமாந்துறை என ஓர்த்தலம் பெரம்பலுர் மாவட்டத்தில் தொழுதூர் அருகு ஓர் சீரிய ஆற்றங் கரையில் அமைந்துள்ளது. தற்காலம் திருச்சி சென்னை பெருஞ்சாலைவழியில் திருச்சிக்கு அடுத்து காணும் சாலை வரி தண்டும் TOLL PLAZA அமைந்த திருமாந்துறையிலும் பெரிய
பழமையான கோயில் உள்ளது.
எனவே குறிக்க மட்டும் காணும் இம் மாந்துறைகளை வைப்புத் தலங்களாகக் கொள்ளவது மரபு எனலாம்
நம் வடகரை மாந்துறை இறைவர்=மாந்துறை நாதர் அம்மை=பாலாம்பிகை, தலப்பயிரினம்=மா. கோயில் சாலைக்கு மிக அருகேயே உள்ளது. சிறிய சீர்மிகு 3 நிலை 7 கலச பதுமைகள் நிறைந்த கோபுரம் தேவார திருப்புகழ்ப் பாடல்கள் பொளித்த கற்பலகைகள் சில நூற்றாண்டு பழமையான கல்வெட்டு ஒன்றும் அம்மை அப்பன் திருமுன்களை சூற்றிவர அகன்ற தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ள திருச்சுற்றும் காணப்படுகின்ன.
முன்பு குறித்தபடியே லால்குடி அன்பில் மாந்துறை என மூன்றினையும் ஓர் முற்பகலிலலேயே திருச்சியிலிருந்து நகரப்பேருந்து பிடித்தே சென்று ஆரவாரமற்ற தியான நிலையில் வழிபட்டு திரும்ப முடியும்.
என் கருவி உட்கொண்ட சில காட்சிகளை இணைப்பினில் காண்க
முறையான திட்டத்துடன் திருமுறைத் தலங்களை வழிபட நினைவோர் திருவானைக்கா பாச்சில் பைஞ்ஞீலி பாற்றுறை எனும் அணித்தே உள்ள ஏனைய காவிரி வடகரைத் தலங்களுடன் இணைந்தும் இவற்றை வழிபடலாம்.
1mAntuRairaja.jpg 140K View Download |
2talavaralARu-kal1.jpg 95K View Download |
3talavarlRu-kal2.jpg 355K View Download |
4mAntuRai-gnAnatEvAram.jpg 208K View Download |
5mAntuRai-gnAnatEvAram2.jpg 272K View Download |
6mAntuRai-tEvAram-d-f.jpg 552K View Download |
6mAntuRai-tiruppukazh.jpg 231K View Download |
7mAntuRai_inscr.jpg 445K View Download |
7mAntuRaisuRRukkoyilkaL.JPG 124K View Download |
8mAntuRaimUlaSW.jpg 417K View Download |
9mAntuRaimUlaNW.jpg 406K View Download |