விசாலம்

விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும்  பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் “சாவடி ஊர்வலம் “என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக் காட்சியைக்காண  மிகவும்  நன்மைப் பயக்கும்,  ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப் பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன் நடைப்பெறுகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித
உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில்  எல்லோரும் கொடுக்கும் உணவைச் சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம். இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர்  நுழைந்தப்போது  அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,”சாயி”என்றால் கூட வாழும் இறைவன் “என்று பொருள் கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் “அல்லா மாலிக்”. பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவின் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்.

பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்பையன். பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டி அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும்  சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும் போது குப்பை   செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு துணியில் சுற்றத்  தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான். பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார். செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க  புதுப்புது சிந்தனைகளும் ஞானமும்  பூககளாக மலருவது அவருக்குத்தான்  தெரியும் அது உடைந்தது அவருக்கு  தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது .

சீரடியில் ராமசந்தரபடேல் என்பவருக்குக் கடும் காய்ச்சல் . ஏற்பட்டது. .உடல் நிலை நாளுக்கு நாள் குன்றியது தான் பிழைப்பது அரிது என அவர் தன் கடைசி  நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் , ஒரு நாள் அவர் படுக்கையின் அருகில்  பாபா  வந்து நின்றார் . அவரைக்கண்ட  படேல்  அவர் காலைக்கெட்டியாக பிடித்துக் கொண்டார். “பாபா நான் இனி பிழைக்க மாட்டேன் .என்னால் இந்த வேதனை தாங்க முடியவில்லை .எனக்கு எப்போது மரணம் ? தயவு செய்து சொல்லுங்கள் ‘அவரையே கருணையாக  பார்த்த பாபா ” என் அன்பு படேல்  ஏன் கவலைப்படுகிறாய்? ?உன் மரணம் தடுக்கப்பட்டது . நீ இனி கொஞ்ச, கொஞ்சமாக தேறிவிடுவாய் . .ஆனால்  தாத்யாபடேலை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அவர்  விஜயதசமி அன்று இந்த உலகை விட்டுப்போய்விடுவார் . இதை உன்  மனதிலேயே வைத்துக்கொள் .தாத்யாபடேலிடம்  சொல்லாதே . அவர் பயத்திலேயே கலங்கிவிடுவார் “

ராமசந்தர  படேலின்  உடல் தேறியது  ஆனால் உள்ளம்  வரப்போவதை நினைத்து வருந்தியது. “தாத்யா படேலைக்காப்பாற்ற முடியாதா? நாள் நெருங்கி வந்து விஜயதசமியும் வந்துவிடுமே ” என்று கவலை மனதை அரித்தது .ஒருவரிடம் இதைச்சொல்லாமல் ரஹஸ்யமாக வைத்திருக்க முயற்சித்தும் கடைசியில் தன் தையற்காரர் பாலா ஷிம்பி என்பவரிடம் இந்த விஷயத்தைஸ் சொல்லிவிட்டார் .நாட்கள் ஓட நவராத்திரி யும் ஆரம்பித்தது  பாபா சொன்னது போல் ஸ்ரீதாத்யாபடேல் சுரத்துடன் படுக்கையில் விழுந்தார் .சீரடி பாபாவைத் தினமும் தரிசிக்கப்போவது நின்றுவிட்டது .  பாபாவைப்பார்க்க முடியாமல் மனம் வருந்தினார். பின் மிக நம்பிக்கையுடன்’  பாபா  தாங்கள் என்னுடன் இருக்க எனக்கு என்ன பயம் ! என் உடலுக்கு ஒன்றும் ஆகாது . எல்லாம் உங்களிடமே  சமர்ப்பணம் ” என்று படுத்த படுக்கையிலேயே  வேண்டிக்கொண்டார் .பாபா இப்போது என்ன செய்வார் ? தன்னை நம்பியவரை கைவிடலாமா ?அவரைக்காப்பாற்ற எண்ணம் கொண்டார் .அவருடைய கர்மாவை தான் ஏற்றுக்கொண்டு மரணத்திற்கும் தயாரானார்

அந்த மரணமும் அவர் தன் பக்தனின்  ஆயுள் முடிவைக் காப்பாற்ற,  தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,

அவருடைய மிகவும் விருப்பமான  சில  தொண்டர்கள் கனவில்  வந்து தன்னுடைய மரணத்தைப்பற்றியும் சூசகமாக கூறியிருக்கிறார். தாஸகணு என்பவர் கனவில் வந்து  “மஸ்ஜித சாய்ந்து விழுந்துவிட்டது .  சில எண்ணெய் வியாபாரிகள்  .கடைக்காரர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்து விட்டனர் நான் விடை   பெறுகிறேன் .  நீ உடனேஅந்த இடம்சென்று என்னைப் பூக்களால் மூடிவிடு ”    என்று சொல்லி மறைந்து விடுகிறார் .தாஸ்கணுவும் அவர் சொன்னபடி பூக்களுடன்  அங்கு சென்று பஜன் கீர்த்தன் பாடி .பாபாவின் பெயரில் அன்னதானம் செய்தார். இந்த விஜயதசமியன்று “சாயி சச்சரிதா” படித்தால் சாயியின்  அருள் பரி பூர்ணமாகக்  கிடைக்கும்  . இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்           

http://www.kollyinsider.com/2011/10/happy-vijayadashami-from-kollyinsider.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விஜயதசமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *