முகில் தினகரன்

காய்கறி மார்க்கெட்.

‘அய்ய்யோ…சதீஷ் வேற வர்றானே!…இப்ப என்ன பண்றது?…இந்த மாதிரி ஒரு அம்மாவோட…இத்தனை பைகளைத் தூக்கிட்டு…நான் போறதைப் பார;த்துட்டான்னா…அவ்வளவுதான்… என்னோட ஃபிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!…அது மட்டுமா?…காலேஜ்ல எல்லார; முன்னாடியும் வெச்சு…இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்!…” குமார். அந்தப் பணக்காரத் தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான்.

அதற்குள் அந்த சதீஷ் அவனைப் பார்த்து விட, ‘போச்சுடா… பார்த்துட்டான்….இனி தப்பவே முடியாது!” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு உடன் வரும் அம்மாவைப் பார்த்தான்.  ‘அய்யோ…இந்த அம்மாவைப் பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியிருக்கு…எண்ணை காணாத நரைத் தலையும்…வெளுக்குப் போன நூல் புடவையும்…”எங்கம்மா”ன்னு அறிமுகப் படுத்தினா நிச்சயம் என்னைத்தான் கேவலமா நினைப்பான்.”

தன்னுடைய ஹூண்டாய் காரை பார;க் செய்து விட்டு குமாரை நோக்கி படு ஸ்டைலாக வந்தான் அந்த சதீஷ்.

குமார; தன் கைகளிலிருந்த காய்கறிப் பைகளை அவசர அவசரமாய் அம்மாவின் கைகளில் திணித்து விட்டு, முக பாவனையைச் சற்று இறுக்கமாய் மாற்றிக் கொண்டு, சதீஷை சற்றுத் தள்ளியே நிறுத்தி விடும் நோக்கத்தில் அவனைப் பார்த்துக் கையசைத்தபடி வேகமாக முன்னால் வந்தான்.

  ‘ஹாய் குமார;!…எங்கே இந்தப் பக்கம்?….ஹூ ஈஸ் தட் ஓல்டு லேடி?” கூலிங் கிளாஸைக் கழற்றிச் சுழற்றியவாறே அவன் கேட்டான். அவன் அணிந்திருந்த உயர;தர டீ-ஷர;ட்டும்….ஜீன்ஸ் பேண்ட்டும் அந்தக் கூட்டத்தில் அவனைத் தனியே காட்ட, அவன் மீதிருந்த வீசிய காஸ்ட்லி செண்ட்டின் நறுமணம் அங்கிருந்த அனைவரின் நாசியையும் நளினமாய்த் தடவிச் சென்றது.

‘நோ யா…சும்மா டைம் பாஸிங்க்காக வந்தேன்!….ச்சை…வெரி டர;ட்டி ப்ளேஸ்…இஸிட்?” செயற்கைத்தனமான பகட்டுடன் பேசினான் குமார்.

‘யா…நானும் கூடத்தான் சும்மாத்தான் வந்தேன்!…ம்ம்…அது யாருன்னு நீ சொல்லலியே!” குமாரின் தாயாரை சுட்டிக் காட்டி அந்த சதீஷ் விடாமல் கேட்க. குமார் நெளிந்தான்.

‘ஓ…தட் ஓல்டு லேடி?…அவங்க எங்க வீட்டு சர;வெண்ட்!” மனங் கூசாமல் பெற்ற தாயை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தினான். மேலும் அவனுடனான உரையாடலைத் தொடர;ந்தால் பொய்க்கு மேல் பொய்யாய் அடுக்க வேண்டி வரும் என்பதை உணர;ந்த குமார;, “ஓ.கே.டா..நான் கௌம்பறேன்…வீட்ல கெஸ்ட் வருவாங்க!” இன்னொரு பொய்யை வீசி விட்டு நகர்ந்தான்.

தூரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கியவன், “வாம்மா கௌம்பலாம்…மீதியெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம்!”என்றான் ஒரு வித பதட்டத்துடன்.

“அட..என்னடா நீ?…இன்னும் பாதி சாமான்கூட வாங்கலை… அதுக்குள்ளார போலாம்கறே?” அவனது அவஸ்தை புரியாத அவள் அப்பாவியாய் கூறினாள்.

“அய்யோ…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எரிந்து விழுந்தான்.

“சரிடா…ரெண்டு..மூணு முக்கிய சாமான்களையாவது வாங்கிட்டு வந்திடறேனே!” கெஞ்சலாய்க் கேட்டாள்.

“ம்.ம்.ம்..சரி…சரி…நீயே மட்டும் போய் வாங்கிட்டு வந்து சேரு…நான் மார்க்கெட் வாசல்ல நிக்கறேன்!” சொல்லி விட்டு வேக வேகமாய் ஓடினான்.

மார்க்கெட் வாசலில் ‘கச..கச’வென்று நின்று கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் தன்னை மறைத்தவாறு நின்று, தாயின் வருகைக்காக காத்திருக்கலானான் அவன்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இயற்கை உந்துதலைத் தவிர்க்க மாட்டாமல் நாலைந்து கார்களைத் தாண்டி மறைவிடம் தேடிப் போனான்.

ஒரு வெண்ணிற மாருதி காரைத் தாண்டும் போது, அந்த சதீஷ் அங்கு நின்று யாரோ ஒரு டீன் ஏஜ் ஏஞ்சலிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சட்டென்று நின்றான்.

“அடப்பாவி…இங்கேயும் வந்துட்டானா?” ஒளிந்தபடியே நகர;ந்த அவன் காதுகளில் அவர;களின் சம்பாஷனை விழஇ கூர;ந்து கேட்டான்.

 

“ஹேய்…சதீஷ்….மார;க்கெட்டுக்குள்ளார நின்னு யாரோடவோ பேசிட்டிருந்தியே…யார; அது?…உன்னோட ஃப்ரெண்டா?” ஒரு வித முகச் சுளிப்புடன் அந்த ஏஞ்சல் குரலில் பியானோ இசைத்தது.

“வாட் தட் ஃபெலோ?…மை ஃபிரெண்ட்?…நோ…நோ…அவன் என் வீட்டு சர்வெண்ட்…அவனைப் போய் என் ஃபிரெண்டுன்னு…ச்சே!…ஜஸ்ட்…என்னென்ன வெஜிடபிள்ஸ் வாங்கனும்னு அவனுக்கு சொல்லிட்டிருந்தேன்!” என்றான் சதீஷ் படு கேஷூவலாக.

முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது குமாருக்கு.  வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்த அம்மாவிடமிருந்து காய்கறிக் கூடைகளை தானே வாங்கிக் கொண்டு நிதானமாய் நடந்தான்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *