வார ராசி பலன்: (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை)

0

 

காயத்ரி பாலசுப்பிரமணியன்
 
மேஷம்: குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. ஆரோக்கியம் வியாபாரிகளின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைவதால், புதிய ஒப்பந்தங்களுக்காக அதிகம் உழைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதிலும் வரையறை இருப்பது நல்லது. கலைஞர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித் தனம்.  

ரிஷபம்: இந்த வாரம் வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பாதுகாப்பை தக்க நேரத்தில் அளித்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உங்களை ஆட்கொள்ளும் காரணமற்ற சோர்வுகளை நீக்க, பெண்கள் எளிமையான உடற்பயிற்சி செய்து வாருங்கள். கலைஞர்கள் முக்கியமான காரியங்களில், தீவிர சிந்தனை மற்றும் திட்டத்தோடும் செயல்படுவது அவசியம். முதியவர்கள் அறிவுரைகளை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். மாணவர்கள் இரவலாய்ப் பெற்ற விலை உயர்ந்த பொருளை பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால், வீண் செலவுகளையும், வேண்டாத மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.

மிதுனம்: இந்த வாரம் தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்க ளின் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். இதனை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொண்டால், அதிக லாபம் பெறலாம். முதியவர்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்ய லாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பும், வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிவாக நடந்துகொண்டால், மூத்தோரின் ஆசியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கடகம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது சில சுணக்கங்களை எதிர்கொண்டாலும் உங்கள் மன உறுதியால், அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடுவீர்கள். மாணவர் கள் படிப்பில் இருந்த மந்த கதி மாறுவதால், புதிய உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பெண்கள் இனிமையாகப் பேசி பணம் கறப்பவர்களை, இனங்கண்டு ஒதுக்கி விட்டால், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் சூழலுக்குத் தக்கவாறு முடிவெடுப்ப தன் மூலம் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளிவிடலாம். பொது வாழ்வில் உள்ள வர்கள் தங்கள் கருத்துக்களை கோர்வையாக சொல்லுவது மூலம் பல சலுகைகளைப் பெறுவதோடு, தங்களுக்கு வேண்டிய ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும்.

சிம்மம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பிறர் கூறும் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருந்துகளை தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் நலிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளியில் காட்டும் பரிவு, இல்லத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், இல்லத்தில் அமைதி எப்போதும் நிலவும். வியாபாரிகள் சரக்குகளின் தட்டுப்பாடு இல்லாதவாறு, நல்ல முறையில் திட்ட மிட்டால், வாடிக்கையளர்களின் வரவு எப்போதும் போலவே இருக்கும்.
 
கன்னி: பெண்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுதிவாருங்கள். வீண் செலவுகளைக் கண்டுபிடிப்பதோடு அவற்றைக் குறைக்கவும் முடியும். மாணவர்கள் பேச்சில் உள்ள கட்டுப்பாட்டை உணவிலும் கடைபிடித்தால்,எந்த தொந்தரவும் இன்றி படிப்பில் கவனம் செலுத்த முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். எளிதில் முடியக்கூடிய சொத்து விவகாரங்கள், இந்த வாரம் சற்றே இழுத்தடிக்கக் கூடும். வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்யும் முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டால் உங்களின் நாணயம் குறையாது.

துலாம்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்ளும் முன் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். மாணவர்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் நினைத்த காரியம் கைகூடும். பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் . நீங்கள் போட்டிருந்த கடன் மனுக்கள் மூலம் கிடைக்கும் பணம் சற்றே தாமதத்திற்குப் பின் கிடைக்கலாம். எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் உடனிருப்ப வர்க ளின் செய்கையால், சங்கடமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவு கள் தரும் ஆதரவு மனதுக்கு இதமாய் இருப்பதால், மன இறுக்கம் குறையும்.

 
விருச்சிகம்: மாணவர்கள் படாடோபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே! பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்துப்பரிமாற்றம் செய்கையில் இதமாகவே நடந்து கொண்டால், உங்கள் கருத்துக்கு மதிப்பிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உங்கள் செயல்பாட்டை செம்மையாக்கிக் கொள்வது நல்லது. வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பதில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். சில நேரம், பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் முடிவெடுக்க இயலாமல் குழப்பமான நிலை இருக்கும். எனவே பொறுமை காப்பது அவசியம்.

 
தனுசு: பணவரவு அதிகரிப்பதால், இந்த வாரம் பல செயல்கள் கிடுகிடுவென்று நடந்தே றும்.பெண்கள் பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்வீர் கள்.மாண வர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.நட்பு கெடாமல் இருக்கும். பெண்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றி னால் தடுமாற வேண்டியிருக்காது. கலைஞர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள் வேலை செய் யும் இடங்களில் மனதில் பட்டத்தை சொல்லுவதை விட,மற்றவர்க்கு தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது.  

மகரம்: மாணவர்கள் பகல் கனவு காண்பதைவிட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பெண்கள் நிறைவு என்பது பொருளில் இல்லை, மனதில்தான் உள்ளது என்ப தை உணர்ந்தால், வாழ்க்கை அமைதியாக செல்லும்.,சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், பெற்றோர்கள் கனிவாக நடந்து கொண்டால், அவர்களின் அன்பை சம்பாதித்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர் ந்து செயல்படுங்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் உங்களின் பிடிவாதத்தை சற்று குறைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும்.

கும்பம்: பெண்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தகாத மாற்றங்கள் உருவானாலும், பொறுமையாய் இருந்தால், விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. மாணவர்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். புதுமையான எண்ணங்களுக்கு தகுந்த நேரத்தில், பங்கு தாரர்கள் பச்சைக் கொடி காட்டும் சூழல் இருப்பதால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். இந்த வாரம், சுப காரிய விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் காணலாம்.  

மீனம்: குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வருவது புத்திசாலித்தனம். விருந்து, விசேஷம் ஆகி யவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழியும் . தொழிலதிபர்கள் வழக்கு தொடர் பான விஷயங்களில், நேரடியாக கவனம் செலுத்துவது அவசியம். எதிர் பாராமல் மேற் கொள் ம் பயணங்களால் முதியவர்களின் ஆரோக்கியத்தில் சற்றே நலிவு உண்டாகலாம். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களை பத்திரமாக வைப்பது நல்லது. மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்கு பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கையாய் செயல்படவும்.  
 
 
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *