பத்திரிகையாளர்கள் எதிர் கட்சியாக செயல்பட வேண்டும்

0

 

டி .எஸ்ஆர் சுபாஷ்


02.12.2012 நெல்லை மாவட்டம்  தென்காசியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி .எஸ் .ஆர் .சுபாஷ் கலந்து கொண்டு பேசியபோது, ”எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி எதிர்கட்சியாக விளங்கினாலும் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்படவேண்டும் என்று பேசினார். மகாகவி பாரதியைப் பற்றி பேசுகையில் தேசப்பிதாவாக     விளங்கிய மகாத்மா காந்தியையே விமர்சித்து, அவருக்குகே கடிதம் எழுதிய தைரியப் பத்திரிக்கையாளராக விளங்கிய பாரதிக்கு மட்டுமே இருந்தது என்றும், பாரதி பிறந்த தினத்தை தமிழக அரசு பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய  ‘தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர்’ மாண்புமிகு ராஜா P.செந்தூர்பாண்டியன் அவர்கள் பேசுகையில் “பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்பட வேண்டிய அவசியம் அம்மாவின் ஆட்சியில் இருக்காது”  என்றும், எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர்களும் குறை சொல்ல முடியாதவாறு  செயல்பட்டுக் கொண்டு வருவதாகும் பதில் அளித்து பேசினார்.

சங்க  கட்டிடத்திற்கு நிதி உதவி செய்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தோழர். பொ.லிங்கம்  பத்திரிகையாளர்களின் கடமையை பற்றி பேசினார்.

 

திருநெல்வேலி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. எஸ். விஜயேந்திரபிதாரி I.P.S, அவர்கள் சமுதாயத்தில் பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
தென்காசி  சட்டமன்ற உறுப்பினரும் சமத்துவ  மக்கள் கட்சி தலைவருமான, ‘சுப்ரீம் ஸ்டார்” ஆர்.சரத்குமார் அவர்கள் பேசுகையில், ‘மாநில தலைவர்’ டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சி போல செயல்பட வேண்டும் என்று பேசினார். நான்  திரைப்பட உலகிற்கும், அரசியல் உலகிற்கும் வரும் முன்பே நான் பத்திரிகையாளராகத்தான் என் பொது வாழ்க்கையை துவங்கினேன் என்றும் ஜனாதிபதியையே கேள்வி கேட்கும் வலிமை பத்திரிகையாளருக்கே இருக்கிறது என்றும், வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்றும் பேசினார்.

அரசு  செயல்பாடுகள் சிறப்பாக அமைவதாலும், பத்திரிகையாளர்களின்  நியாயமான கேள்விகளுக்கு செவி சாய்ப்பதாலும், எந்த எதிர் கட்சிகளுக்கும் வேலை இல்லை என்றும், பத்திரிகையாளர்கள்  எதிர்க்கட்சி போல் செயல்படவேண்டிய அவசியம் இருக்காது என்றும்  பதில் அளித்து பேசினார்.

மேலும்  இந்நிகழ்ச்சிக்கு, தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான, கோட்டாட்சித் தலைவர் P.இராஜா  கிருபாகரன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் R.பாண்டியராஜன், நகரமன்ற தலைவி  திருமதி S.பானு, V.சுடலை, R.இசக்கியப்பன், M.இப்ராஹிம், மற்றும் ஏராளமான  அரசியல் பிரமுகர்களும்  பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.

(TUJ) சங்கத்தின் பொதுச்செயலாளர்கள்  கு.வெங்கட்ராமன், ‘கடலூர்’ K.ரமேஷ்குமார், ‘விருதுநகர்’  பழனிகுமார், ‘நெல்லை’ ராமகிருஷ்ணன், சென்னை மாவட்ட நிர்வாகிகள், “வாசன் பார்வை” செல்லப்பாண்டியன், “கழுகு” K.ராஜேந்திரன், “கடலூர்”  முனுசாமி, பக்ருதீன், , ஏ.வி.பி  ஜான்சன், பீர் ஹுசைன் I.ஆனந்தராஜ் ‘உடுமலை செல்வராஜ், எஸ்.செல்வரகு-PRO, ‘திருப்பூர்’ முரளி, விஜயா, இளங்கோ, ‘ஆடிட்டர்’ கண்ணன் மற்றும் பலர்.  

கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள்.

 
சிறப்பு அழைப்பாளராக புதுவை பிரஸ்கிளப் தலைவர் மதி மகாராஜா பங்குபெற்றார். முன்னதாக தென்காசி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் M. சண்முகம் வரவேற்புரை வழங்க, தென்காசி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் M.முத்துசாமி நன்றியுரையாற்றினார்.

இந்த  வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்ச்சியில் டி.யூ.ஜெ வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், நெல்லை மாவட்டத்தின் செயல்  வீரருமான தோழர் ஜி.பரமசிவம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *