நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிய, வீடு வீடாகக் கணக்கெடுப்பு
நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிவதற்கு விரிவான கணக்கெடுப்பு ஓராண்டிற்குள் நடத்தப்பட வேண்டும். நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் எளிமையானதாகவும் விருப்பத்தின் அடிப்படையில் அமையாமல் தெளிவானதாக இருக்க வேண்டும். இதற்கான பரிந்துரையை இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது 6ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பு நடத்தப்படும் பகுதிகளைச் சேர்ந்த ஒரு நபராவது இடம் பெறும் வகையில் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று, நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு கண்டறியப்படும் ஏழைகளுக்கு அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பயன்களையும் பெறும் வகையில் பன்முகப் பயன்பாட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
கணக்கெடுப்பு மூலம், நகர்ப்புற ஏழைகள் கண்டறியப்பட்டு, பிறகு திட்ட அடிப்படையிலான அணுகு முறையில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் திட்டமிட்ட முறையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆணையம் வழங்கியுள்ள முக்கிய பரிந்துரைகளுள் இதுவும் ஒன்றாகும்.
திறன்கள் மற்றும் பயிற்சி மேம்பாட்டின் அடிப்படையில் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நகரங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் கல்வித் திட்டம் பிரிக்க முடியாத அங்கமாக விளங்க வேண்டும் என்பன போன்ற பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை