செண்பக ஜெகதீசன்…
வந்தது புதிதாய் ஆண்டு
வாழ்க்கை சிறந்திட வேண்டு,
சிந்தையில் மேன்மை கொண்டால்
சிறப்புதான் என்றும் உண்டு,
முந்தைய ஆண்டின் தடைகள்
முன்னே செல்ல நடைக்கல்,
நொந்திடத் தேவை யில்லை
நாளை நீயே வெல்வாய்…!
படத்திற்கு நன்றி: http://www.ladcblog.org/2012/01/the-7-ups-of-life/thumbs-up/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…