வால்ட் விட்மன் வசன கவிதை -8
என்னைப் பற்றிய பாடல்
(Song of Myself)
(புல்லின் இலைகள் -1)
மூலம் : வால்ட் விட்மன்
என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்
என்னைப் பற்றிப் பாடுகிறேன்
எதனை நான் ஊகிப் பேனோ
அதனை நீயும் செய்ய வேண்டும் !
காரணம் :
எனக்குள் இருக்கும் ஒவ்வோர் அணுவும்
உனக்குள் இருப்பதை ஒத்திருப் பதே !
ஊர் சுற்றி நான்
என் ஆத்மாவை ஈடுபட அழைப்பேன்
கண்ட நேர மெல்லாம் திரிந்து
களைத்துச் சாய்வேன்
வேனிற் காலத்துக்
கானகப் புல்லின் முட்களைக்
கண்ணோக்கி !
என் நாக்கும், குருதியில் உள்ள
ஓவ்வோர் அணுவும்,
இந்த மண்ணிலும்,
இந்தக் காற்றிலும் உருவானவை !
இங்கு பிறந்த பெற்றோருக்கு
இங்கு பிறந்தவன் நான் !
என் பெற்றோரும் அவ்விதமே !
அவரது பெற்றோரும் அப்படியே !
முப்பத்தி ஏழு வயதான எனக்கு
பூரண உடல் நலம்
ஆரம்பம் !
மாறாமல் சீரிய நலமிருக்கும் நான்
மரிக்கும் வரை !
மத நெறிகள், கல்விக் கூடங்கள்
இவற்றை நான்
ஒதுக்கி வைத்தேன் !
ஓய்வெடுத்துச் சிறிது காலம்
போது மென இருந்தேன்.
ஒருபோதும்
மறக்க வில்லை நான் அவற்றை !
நல்லதோ, தீயதோ துறைமுகத்தில்
நன்கூரம் பாச்சுகிறேன்.
ஒவ்வோர்
அபாயம் நேரும் போது முன்வந்து பேச
அனுமதி உள்ள தெனக்கு !
இயற்கை தனைத் தடை யின்றி
ஏற்கும் என் உள்ளம்
எந்தன் மூல ஆற்ற லோடு !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 23, 2013)
http://jayabarathan.wordpress.com/