வால்ட் விட்மன் வசன கவிதை -8

0

 

என்னைப் பற்றிய பாடல்

(Song of Myself)

(1819-1892)

(
புல்லின் இலைகள் -1)

மூலம் : வால்ட் விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்

என்னைப் பற்றிப் பாடுகிறேன்

எதனை நான் ஊகிப் பேனோ

அதனை நீயும் செய்ய வேண்டும் !

காரணம் :

எனக்குள் இருக்கும் ஒவ்வோர் அணுவும்

உனக்குள் இருப்பதை ஒத்திருப் பதே !

ஊர் சுற்றி நான்

என் ஆத்மாவை ஈடுபட அழைப்பேன்

கண்ட நேர மெல்லாம் திரிந்து

களைத்துச் சாய்வேன்

வேனிற் காலத்துக்

கானகப் புல்லின் முட்களைக்

கண்ணோக்கி !

 

என் நாக்கும், குருதியில் உள்ள

ஓவ்வோர் அணுவும்,

இந்த மண்ணிலும்,

இந்தக் காற்றிலும் உருவானவை !

இங்கு பிறந்த பெற்றோருக்கு

இங்கு பிறந்தவன் நான் !

என் பெற்றோரும் அவ்விதமே !

அவரது பெற்றோரும் அப்படியே !

முப்பத்தி ஏழு வயதான எனக்கு

பூரண உடல் நலம்

ஆரம்பம் !

மாறாமல் சீரிய நலமிருக்கும் நான்

மரிக்கும் வரை !

 

மத நெறிகள், கல்விக் கூடங்கள்

இவற்றை நான்

ஒதுக்கி வைத்தேன் !

ஓய்வெடுத்துச் சிறிது காலம்

போது மென இருந்தேன்.

ஒருபோதும்

மறக்க வில்லை நான் அவற்றை !

நல்லதோ, தீயதோ துறைமுகத்தில்

நன்கூரம் பாச்சுகிறேன்.

ஒவ்வோர்

அபாயம் நேரும் போது முன்வந்து பேச

அனுமதி உள்ள தெனக்கு !

இயற்கை தனைத் தடை யின்றி

ஏற்கும் என் உள்ளம்

எந்தன் மூல ஆற்ற லோடு !

 

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 23, 2013)

http://jayabarathan.wordpress.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *