பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
பாராதிருப்பதில் பயன் என்ன ?
சால்வை மூடிட வலம்வர கொடியோர்
சாடாதிருப்பதில் பயன் என்ன?
வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
வீழாதிருப்பதில் பயன் என்ன?
போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
வாழ்க்கை நடத்திட பயன் என்ன?
படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
எடுத்த வழிமுறை வீணாமோ
பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
வளர்ந்திட சமைத்தார் தன்காலம் ?
நீதி நேயம் நியாயம் தர்மம்
அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??
சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
பிறந்த பயன் என்ன? எதிர் காலம் என்ன? நேரடியாக கேட்காமல் கேட்டு வந்தகவிதையில் நல்ல ரசிப்பு. வாழ்த்துக்கள்.
சத்தியக் கவிதை. ‘பாதி வஞ்சம் மீதி லஞ்சம்’ எனும் வரிகளில் அனல் பறக்கிறது. அருமை சகோதரரே!!. மிக்க நன்றி.
எல்லாம் காலத்தின் கோலம்…கவிவந்த மாயம் – தமிழுக்கும் தமிழருக்கும் நன்றி