விசாலம்

இந்தப் பங்குனி ,சித்திரை மாதம் வந்தாலே பலவிதமான பலதரப்பட்ட பண்டிகைகள் திருநாட்கள் வந்து மன மகிழ்ச்சியைத் தருகின்றன. வட இந்தியாவில் டிசம்பர் ஜனவரி வரை மிக அதிகமாகக் குளிரில்  மக்கள் வெடெவெடத்துப் பின் குளிர் குறைய ஆரம்பித்து அதன் பின்  ஹோலிப்பண்டிகையுடன்  ,சிவராத்திரியுடன் குளிர் போ போ என்று போய்விடும்  பின் வசந்தக்காலம் ,,,, வசந்தபஞ்சமியிலிருந்து ஆரம்பித்து வரிசையாக எல்லா மதத்தினருக்கும்   கொண்டாட்டம் தான் மக்கள் பனியில் தவித்தப்பின் ஆனந்தமாய் வெளியில் வருவதும் .பூக்கள்    பூத்துக்குலுங்கி வரவேற்பதும் மிக  அழகான காட்சி

இந்த நேரத்தில் தான் குடியரசுத்தலைவர் மாளிகையின்  தோட்டம் மக்கள் பார்வைக்கு  விடப்படும்  பலதினுசு ரோஜாக்கள் நம்மை மயக்க வைக்கும் மாசி பௌர்ணமி அன்று  ஹோலிப்பண்டிகை   இது ஒருவாரம் முன்பே களைக்கட்டிவிடும்  எல்லா மாணவர்களும் பலூனில் நீர் நிரப்பி அதைக் கட்டிவிட்டு அந்தப்பந்தை எல்லோர் மேலும் வீசுவார்கள் முக்கியமாக காலேஜ் மாணவிகள் இதில் அவதிப் படுவார்கள். ஹோலி     சோட்டி  ஹோலி  ,படி [badi]  ஹோலி என்று இரண்டு நாட்கள் கொண்டாடப்படும்    சோட்டிஹோலியில்  பலநாட்கள் முன்பே மரக்கிளைகள்  குச்சிகள் பல அட்டைகள் என்று சேகரித்து அதை  சோட்டி    ஹோலி அன்று எரித்து  அதைச் சுற்றி பாட்டுக்களும் பாடி நடனங்களுடன் கொண்டாடுவார்கள் .நிச்சியம்  மதுவும் இருக்கும்   விருந்தோம்பலும் உணடு. சுடச்சுட பன்னீர் பகோடா .மிளகாய் பஜ்ஜி . நமக்பாரே போன்றவைகள்
தட்டுக்களில் பரப்பபட்டிருக்கும் அதற்கு ஒத்துப்போகும்  புதினா கொத்தமல்லி சட்னி ..ஆஹா  அமிருதமாக இருக்கும்

ஹோலி பெயரைக் கேட்டாலே வண்ணங்களும்  “:பிச்காரி”என்ற தண்ணீர் பீச்சும் குழாய்களும் ஒவ்வொருவர் அன்புடன் தழுவுதலும்”ஹோலி ஹை  ஹோலி  ஹோலி முபாரக்”என்ற ஆனந்தக் கூவலும் நம்மைப் பரவசப்படுத்தும்  மஹாராஷ்ட்ராவில்  இதை மிகப்பிரமாதமாகக் கொண்டாடுவார்கள் இதை”ரங்கபஞ்சமி” என்பார்கள் வசந்தக்காலத்தின் நுழைவு நாள் இது,.இங்கு  செம்படவர்கள்  அதிகம் பங்கேற்று  தங்களை மறந்து களிப்பார்கள் எல்லோரும் ஒவ்வொரு சாலையின்  நடுச்சந்தியிலும்  மேலே சுமார் ஆறு அல்லது ஏழு மாடி உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம்  ரூபாய்கள் வசூலித்து தனியாகக் கட்டி விடுவார்கள். பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும்  இதை உடைக்க ஒரு “டோலி”கும்பல் வரும். அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும்  .எல்லோரும் பாட்டு பாடிக்கொண்டு “கோவிந்தா ஆலாரே” என்று  கொட்டு கொட்டிக்கொண்டும்  வருவதைப் பார்த்தால் நம் உடலும் சிலிர்க்கும் பின் ஒருவர்க்கொருவர் முக்கோணம் போல் அமைப்பில் ஒருவர் மேல் ஒருவராக ஏறி அதை எட்டிப்பிடித்து உடைப்பர்ர்கள். பார்ப்பவர்கள் அவர்களை ஏறவிடாமல் தண்ணீர் கொட்டுவதும்  உண்டு இதே போல் தான் ஜன்மாஷ்டமி அன்றும் இருக்கும்   அவர்கள் சாமர்த்தியமாக எடுத்துவிட்டால் அந்த ரூபாய்கள் அவர்களுக்கே

லக்கூஜி ஜாதவ் மஹராஜின் பெண் ஜீஜாபாய் , அவள் தன் ஐந்து வயதில்  விளையாட்டாக எல்லோர் மேலேயும்  வண் ணக்கலர் தண்ணீரில் கலந்துத் தெளித்தாள் அப்போது சிறு பையன் “சாஹூஜி மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே தன்  மகனுக்கும் ஜீஜாபாயிக்கும் திருமணம் நிச்சியம் செய்து விட்டார்  பின் சில வருடங்களுக்குப் பிறகு வீர சிவாஜி அவர்களுக்குப் பிறந்தார் பின் மஹாராஷ்டர மாகாணமும் பிறந்தது  இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரணமாகிறது

இப்போது மதுரா பிருந்தாவன் போவோம்  .இங்கு ஹோலி ராதா கிருஷ்ண் பாவத்துடன் கொண்டாடப்படுகிறது ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்து கண்ணன் தன் தாய் யசோதையிடம் சென்று”அம்மா நான் மட்டும் ஏன் கருப்பு  ராதா மட்டும் ஏன் இத்தனைச்சிகப்பு”என்றார் யசோதைக்குப் பதில் சொல்லத்  தெரியவில்லை .அப்போது கண்ணன் கருப்பு வர்ணம் குழைத்து அவள் முகத்தில் பூசி  அவளையும்  கருப்பாக்கினாராம்   .இது முதலிலேயே ராதாவின்  எண்ணமாக இருந்தது   .இதை  அறிந்து கொண்டு கண்ணன் இதைச் செய்து விளையாடினாராம்.   இதனால் இங்கு ஹோலியில் கலரைக் குழைத்து முகத்தில் பூசுகிறர்கள்.ஒருவர் யார் என்றே அடையாளம் சொல்ல முடிவத்தில்லை அத்தனை வண்ணக் கலவைகள்.இதைக்குறித்துத்  தான் “ராசலீலா” என்ற நடனம் உண்டாயிற்று . ஹிந்தி கவிஞர்   பிஹாரிலால் இது பற்றி அழகாக் கவிதைகள்: எழுதி இருக்கிறார் .
மிக மட்ட ரகமாக் ஹோலி களிப்பது பீஹாரில் தான்  தண்ணிருக்கு பதிலாக சாணம் கரைத்து தலையில் ஊற்றுவார்கள் சில சமயம் அழுக்குத்தண்ணிரும் உண்டு பஸ்ஸில் உள்ளே சாணம் வீசி அடிப்பார்கள் நான் ஒரு தடவை கயா போய் வந்த போது  அவர்களிடமிருந்து தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது ,தவிர பெண்கள் வெளியே போகவே முடியாது. கொஞ்சமும் பாதுகாப்பு இருக்காது ,

இந்த ஹோலி புராண கதையில் பிரஹ்லாதனும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்  .எதற்கும் அசையாமல் “ஒம்  நமோ நாராயணாய” என்று சிறுவன் பிரஹ்லாதன் சொல்லி வருகிறான். பல விதமான  தண்டனைக் கொடுத்தும் அவன் மனம் மாறவில்லை கடைசியில்  அவனைத் தீயை வளர்த்து அதில் அவனது அத்தை ஹோலிகா உடல் சுடாதபடி  ஒரு மாயப் போர்வைச்சுற்றிக்கொண்டு   அநத்த் தீயின் நடுவில் அமர்ந்தாள் பின் பிரஹ்லாதனையும் அழைத்தாள். பிரஹ்லாதன் அவள் மடியில் அமர்ந்து “ஒம் நமோ நாராயணாய” என்று ஜபிக்க ஹோலிகாவின் போர்வை கழண்டு பிரஹ்லாதனைச் சுற்றிக்கொண்டு விட்டது. பிரஹ்லாதனுக்கு ஒன்றும் ஆக வில்லை ஆனால் ஹோலிகா எரிந்து சாமபலானாள். இறக்கும் முன் ஹோலிகா தன்னை மன்னிக்கும்படி பிரஹ்லாதனைக் கேட்டுக் கொண்டாள்.தன் தவறுக்கு வருந்தினாள் இந்த ஞாபகமாகத்தான்  சோட்டி ஹோலியின் போது  கட்டைகள் போட்டு எரிய விடுகின்றனர்

இதெ போல் இதைக் காமத்தகனம் என்றும் கொண்டாடுகின்றனர்  சிவனது தபத்தைக் கலைக்க வந்தக் காமனை தன் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விட்டார் சிவன் பின் அவனது மனைவி வந்து அழுது மன்னிப்ப்பு கேட்க அவளது கண்களுக்கு மட்டும் ரதி தென்படுவாள் என்று வரம் அளித்தார் “காதலுக்கு கண்ணில்லை என்று இதனால் தான் சொல்கிறார்களோ ?மதுராபிருந்தவன் துவாரகாவில்  கண்ணன் சிலலயும் விட்டு வைப்பதில்லை அந்தச் சிலையையும் பீச்சுக்குழலால் வர்ணங்கள் பீச்சி  கண்ணன்  ராதை போன்று வேஷம் தரித்து வயசு வேறுபாடின்றி  சிறுவர் முதல் வயதானவர் வரை  இந்த வண்ணக்க்லவையில் மிதந்து
களிக்கின்றனர்.ஜாதி மதம் வித்தியாசமின்றி  ஏழைப் பணக்காரார் என்ற் பாகுபாடுமின்றி கொண்டாடும்  பண்டிகை இந்த ஹோலி ,,இதை இன்னும்  ஒரு ஒழுங்குடன்   ஒழுக்கத்துடன்கொண்டாடினால் மிகவும் நன்றாக இருக்கும்   .இந்த ஹோலியின் அருகிலேயே   கிருஸ்தவ திருநாள் புனித வெள்ளியும்  அத்துடன் முருகனுடய திருநாளான “பங்குனி உத்திரமும் வருகிறது இது முடிந்தவுடன்  ஜைன மதத்தின் தலைவர் ஸ்ரீ மகாவீர் ஜயந்தியும்   ,தலித் மக்களுக்கும் உரிமை வாங்கித்தந்து அவர்களது முன்னேற்றத்திற்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கரின்  பிறந்த நாள்  வருகிறது  இத்துடன் புரட்சிகவிஞர் திரு பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள் அத்துடன் அவரது  பிறந்த நாளும் எப்ரலில் வருகிறது.முஸ்லிம்  திருநாளும் இந்த மாதத்தில் வருகிறது “மிலாத் உன் நபி “என்ற் திருநாளும் மொஹிதின் ஆண்டவர் உர்ஸ் என்பதும்  வருகின்றன பல கோவில்களில் கொடியேற்றி ப்ங்குனி உத்திரம் திருவிழா நடப்பதும் இம்மாதத்தில் தான் தவிர ராம நாமத்தின்  பெருமையை உணர்த்தும்  ஸ்ரீ ராமநவமியும்  நம் பாப புண்யங்களைக் கணக்கெடுக்கும்  ஆடிட்டர் ஸ்ரீ சித்திரபுத்திரன்   பிறந்த
சித்திராபௌர்ணமியும்  இந்த ஏப்ரலில் தான்  இதனால் தானோ வங்கியிலும் வருடக் கடைசி கணக்கு வழக்குகள் சரிப்பார்த்து முடித்து புதிதாக ஆரம்பிக்ககிறார்களோ என்னவோ?தவிர மாணவ மாணவிகள் பரீட்சை டென்சன் முடிந்து  சுதந்திரமாக கொண்டாடும் மாதமும் இதுதான் தவிர தெலுங்கு கன்னட மஹாராஷ்ட்ர  வருடபிறப்பும் தமிழ் ,பெங்காலி ஒரிஸ்ஸா மக்களின் வருடப் பிறப்பும்  இந்த ஏபரல் மாதத்தில் தான் வருகிறது ,இந்த வசந்தக் கால பல விதமான கலாச்சாரத் திருநாட்கள் வந்து ஏப்ரல் மாதத்தை மேலும் பெருமைப்படுத்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆன்மீக வண்ணக்கலவை

  1. வண்ணக் கலவை எண்ணங் கவரும் அழகான ஓவியமாகி மிளிர்கிறது. எல்லா விதக் கலாசாரங்களையும், அவற்றின் சாதக பாதகங்களுடன் பாரபட்சமின்றி அலசியிருக்கும் நடை, மிகவும் ஈர்த்தது. மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *