9வது முறையாக 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி! சேவாலயா மாணவர்களின் சாதனை!
SEVALAYA
(Registered Charitable Trust)
F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.
Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.
Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India
Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.
E-mail: Sevalayamurali@gmail.com, Sevalayaprm@sevalaya.org, Visit us at: www.Sevalaya.org.
———————————————————————————————————-
31st May. 2013
Press Release
சேவாலயாவின் தொடர் சாதனை பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி
சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி 10ஆம்வகுப்புப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 94 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10 மாணவர்கள் 450க்கு மேற்பட்ட மதிப்பெண்களும் 25 மாணவர்கள் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் 82 பேர் 300க்கும் மேறப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளானர்.
முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு:
இடம் | பெயர் | மதிப்பெண்கள் (500க்கு) |
I | V.பிரவீனா | 482 |
II | R.நந்தினி | 473 |
III | C.மகேஷ்வரி | 470 |
III | P.கஸ்தூரி | 470 |
V.பிரவீனா:
மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த V.பிரவீனா 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. மருத்துவராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட பிரவீனா பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.
R.நந்தினி:
473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள நந்தினி சேவாலயாவில் பால்வாடியிலிருந்தே கல்வி பயின்று வருகிறார். இவரது தந்தை வாடகை வண்டி ஓட்டுனராக உள்ளார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்குரைஞராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட நந்தினி பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.
C.மகேஷ்வரி
500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மகேஷ்வரி கசுவா கிராமத்தைச் சார்ந்த மாணவி. இவரது தந்தை விவசாயக் கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை தையல் கூலியாக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.
P.கஸ்தூரி:
500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள கஸ்தூரி பூசாலிமேடு கிராமத்தைச் சார்ந்த மாணவி. ஆசிரியையாக வேண்டும் என்பதை கனவாகக் கொண்டுள்ளார்.
சேவாலயாவுக்காக
வி.முரளிதரன்
(நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்)
————————————————————————————
Board of Trustees
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram
Advisory Committee: Dr.G.Nammalvar,
Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan