விசாலம்

மகாவிஷ்ணு ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதரித்தார் என்று தசாவதாரத்தில் காண்கின்றோம் .கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி அன்று வீட்டில் குட்டிப்பாதங்களை மாக்கோலமாகப்போட்டு சின்னக்குழந்தை குதித்துக்குதித்து உள்ளே வருவதைப்போல் ஒரு கற்பனையும் செய்கின்றோம்.பெருமாளை விட பெருமாளின் திருவடிக்கு அதிக சக்தி தான் .கீதையில் கண்ணன்”என் திருவடிகளைச்சரணடைந்தால் பாபம் எல்லாம் போக்கி மோட்சம் அடைய அருள் புரிவேன் என்கிறார். பாரதியாரோ “கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே  என்றும் பின் “தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே” என்று பாடி திருவடியின் சிறப்பைச்சொல்கிறார், வளளுவரோ  “பற்றுக பற்றற்றான்  பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு   என்று குறளில் சொல்கிறார். அதாவது ஆசாபாசம் மாயை போன்றவை விலகுவதற்கு பற்றேதும் இல்லாத இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஸ்ரீராமர் பாதம் விற்பார்கள். அதை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். திருப்பதி ஸ்ரீ வெங்கடாசல்பதியின் பாத தரிசனுமும் காலை வேளையில் கண்டு அருள் பெற க்யூ வரிசை நீண்டு இருக்கும். ராமாயணத்தில் ராமர் கானகம் வந்த போது வேடனான் குஹ்ன் ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி அந்தத்திருவடிகளுக்கு பூஜையும் செய்கிறான். அவரது சகோதரன் பரதனோ தன் தாய் தனக்கு என்று வாங்கிக்கொடுத்த நாட்டை ஏற்க மறுத்து ராமரைப்பார்த்து திரும்பி வருமாறு மன்றாடுகிறான், ஆனால் ராமர் அதற்கு இஷடப்படாததால் அவரது திருவடிகளில் ஏறிய பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான். சமீபத்தில் கிருஷணரைப்பற்றி  பிருந்தாவன கீதையில்  சில விஷயங்கள் படித்தேன். அதில் யமுனையும், காளிங்கனும் மகாவிஷ்ணுவின் திருவடிகள் தங்கள் மேல் பட வேண்டும் என்று மிகவும் விரும்பினார்கள்.காளிங்கன் முற்பிறவியில் ஒரு கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தினால் ஐந்துதலை நாகமாக் பிறவி எடுத்தான் எப்படியும் திருமாலின் திருவடி தன் தலையில் பட்டு தனக்கு சாபவிமோசனம் ஆகிவிடும் என்று நம்பியிருந்தான். இதே போல் யமனின் தங்கை. சூரியபுத்திரி விஷ்ணு பாதங்களைத் தொட வேண்டும் என்று ஆசைக்கொண்டாள். அது என்ன சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றா?. கடும் தவத்தை மேற்கொண்டாள். காத்து ரக்ஷிக்கும் தெய்வமான விஷ்ணு உடனே தோன்றி தான் கிருஷ்ணராக அவதாரம் எடுக்கும் நேரத்தில் அவள் விருப்பம் நிறைவேறும் என கூறி மறைந்தார் .யமுனையும் பொறுமையாகக்காத்திருந்தாள் ஆவணி மாதம் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் பிறந்தார். அவரது கட்டளைப்படி வசுதேவர் அவரை ஒரு கூடையில் வைத்தபடி யமுனைக்கரைக்கு வந்தவுடனேயே யமுனை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்கே கண்ணனின் பாதங்கள் நம் மேல் படாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள். மழைக்கொட்டித்தீர்த்தது.யமுனையின் வெள்ளம் அதிகரித்து வசுதேவரின் இடுப்பு, பின் தோள், என்று நிரம்பி கழுத்துவரை வந்துவிட்டது. அப்படியும் வசுதேவர் நம்பிக்கையை இழக்காமல் மேலே நடந்தார்.   பின் இன்னும் மேலே ஏற கண்ணன் யமுனையைத் தொடும்படி தன் குஞ்சுக்கால்களை கூடைக்கு வெளியே போட்டார். அந்தக்கமல பாதங்களை யமுனைத்தொட்டுவிட்டாள். ஒரே மகிழ்ச்சி. தன் தவத்தின் பலனைக்கண்டுமகிழ்ந்தாள். நன்றியை தெரிவித்து கிருஷ்ணர் அக்கரைக்கு போக ஏதுவாக வசுதேவருக்கு இரு பக்கமும் தன் வேகத்தைக்குறைத்து நல்ல பாதையை வகுத்து தந்தாள்.

காளிங்கன் தனக்கு கண்ணனது திருவடிகள் கிடைக்கவில்லையே என்று அந்தப்பொய்கையிலேயே வசிக்க ஆரம்பித்தான். விஷத்தைகக்க்கினான் இதனால் காளிந்தி பொய்கையில் நீர் கெட்டு ஊர் ஜனங்கள் அங்குப்போகாமல் ஒதுங்கினர். பலரும் காளிங்கனைப்பார்த்து நடுங்கினர் கிருஷ்ணர் மாடுமேய்க்கச்சென்று சமயம் பார்த்து பலர் தடுத்தும் காளிந்திப்பொய்கையில் குதித்தார். காளிங்கனுக்கு மகிழ்ச்சி. தன்னுடைய ஐந்துதலையை விரித்து கிருஷ்ணரைத் தாங்கிக்கொண்டான். கிருஷ்ணரின் திருவடிகள் அவனது ஐந்துத்தலைகள் மேலும் நடனமாடியது. மகிழ்ச்சியில் விஷம் கக்கினான் பின் அவன் சாபம் நீங்க பழையபடி கந்தர்வனாகிவிடுகிறான். திருவடிகளுக்கு இறைவனை விட அதிக சக்தி இருக்கிறது. குருவின் பாதங்களை அலம்புகிறோம் பாத பூஜை செய்கிறோம் “அவனருளால் அவன் தாள் வணங்கி’  என்று அவர் பாதங்களை நாமும் சரணடைவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருவடி!…

  1. திருவடிகளின் பெருமையை அருமையாக விளக்கும் அற்புதமான பகிர்வு!!.   எத்தனை முகங்கள் அல்லது எத்தனை கரங்கள் கொண்டதாக தெய்வ உருவம் இருப்பினும், திருவடிகள் மட்டும் இரண்டு. பக்தர்கள் தம் இரு கைகளால் பற்றிக் கொண்டு வணங்க எளிதாக இருக்கும் பொருட்டே அனைத்து தெய்வ உருவங்களிலும் திருவடிகள் மட்டும் இரண்டு என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருமையாகச் சொல்வார். பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *