சு.கோபாலன்

 

vinayagar-jaffnavoice

 

 

 

 

 

 

 

 

 

ஆறுமுகன் மூத்தவன் அவன் ஆனை முகத்தவன்

ஊறுகள் யாவும் களைந்து உவகை அளிப்பவன்

புல்லையும் பூவாய் உகந்து ஏற்றுச் சூடுவான்

தொல்லை எல்லாம் தொலைத்து நல்லதே செய்வான்

மோதகப் பிரியன் பாதகம் யாவும் போக்கி

சாதகமாய் சந்தர்ப்பங்கள் சேர்ந்திட அருள் புரிவான்

புள்ளிமயில் வாகனன் இளையவன் முருகனுக்கு

வள்ளி கரம் பற்றிட வழிவகுத்து உதவியவன்

வலது தந்தத்தால் வியாசர் கூற்றை எழுதி

உலகு பாரதமெனும் காவியம் பெற்றிட அருளியவன்

நம்பிக்கை கொண்டு நாள்தோறும் வழிபடும் அடியவர்க்கு

தும்பிக்கை சாமி காலமெலாம் துணை நிற்பானே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *