விநாயகர் துதி
சு.கோபாலன்
ஆறுமுகன் மூத்தவன் அவன் ஆனை முகத்தவன்
ஊறுகள் யாவும் களைந்து உவகை அளிப்பவன்
புல்லையும் பூவாய் உகந்து ஏற்றுச் சூடுவான்
தொல்லை எல்லாம் தொலைத்து நல்லதே செய்வான்
மோதகப் பிரியன் பாதகம் யாவும் போக்கி
சாதகமாய் சந்தர்ப்பங்கள் சேர்ந்திட அருள் புரிவான்
புள்ளிமயில் வாகனன் இளையவன் முருகனுக்கு
வள்ளி கரம் பற்றிட வழிவகுத்து உதவியவன்
வலது தந்தத்தால் வியாசர் கூற்றை எழுதி
உலகு பாரதமெனும் காவியம் பெற்றிட அருளியவன்
நம்பிக்கை கொண்டு நாள்தோறும் வழிபடும் அடியவர்க்கு
தும்பிக்கை சாமி காலமெலாம் துணை நிற்பானே!