பிச்சினிக்காடு இளங்கோ

அன்று…

இரங்கற்பா படித்து

இதயத்தைப்பிழிந்து

கண்ணீர் கசியவைத்தேன்

வாழ்த்த அழைத்தபோதும்

வளமானச்சொற்களால் வாழ்த்தி

வாழ்த்திடப்பெற்றேன்

கலந்துரையாடும்போதும்

கரைந்துரையாடி

கவனிக்கப்பெற்றேன்

முடிந்ததைச்செய்யும்போதும்

முழுமையாய்ச்செய்தேன்

என

முன்னுரை கிடைக்கப்பெற்றேன்

ஆசையே இல்லா

புத்தரைப்போல பேசி

அனைவராலும் கவரப்பெற்றேன்

பெண்களோடும் அப்படித்தான்

பெருமைப்பட நடந்துகொண்டேன்

பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

எல்லா இடத்திலும்

எனக்குப்பேர் என்றாலும்

எல்லார் இதயத்திலும்

என்பேர் நின்றாலும்

குரங்கு மனசுமட்டும்

குறைபடவைக்கிறது என்னை

(09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. மகன் கலைக்கோவனின் நண்பன் ரவியின் மனைவி மைதிலிக்கு கேகே மருத்துவமனையில் பெண்குழந்தை பிறந்தது.

67 எண் பேருந்தில் சுவாசுகாங்கிலிருந்து புறப்படும்போது படித்த கதை திரு எம்.சேகர் எழுதிய ‘முகம் தெரியாத மனம்’ படித்துக்கொண்டிருந்தேன். முடிவு கவர்ந்தது. முடிவில் எழுதிய கவிதையே இது பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *