சு.ரவி

Parthi Nayakan 5 Jul 09 2

Sathya Sai Feb 09

 

 

 

 

 

வணக்கம், வாழியநலம்

தன்னை ஏற்க மறுப்பவர் உள்ளத்திலும் கூட எப்போது உட்புகுந்தார் என்று உணர ஏலாது, ஒரு ஊதுவத்தியின் புகை இல்லம் முழுவதும் வியாபிப்பது போல அவர் தம் வாழ்விலும் புகுந்து நிறைந்து பகவான் ஆக்ரமிக்கிறார் என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

பேரான்மா ஒன்றின் சங்கல்ப பலத்தால் மட்டுமே மானுடரால் செயற்கரிய மாபெரும் செயல்கள் நிறைவேறும் என்று பாபா பலமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு, புனே நகர்ப்புறதே ஹட்ஷி என்ற திருத்தலத்தில் பாண்டுரஙன் மற்றும் ஷீரடி பாபா ஆலயங்களைக் குடமுழுக்காட்டித் திறந்து வைத்து பாபா 2 தினங்கள் உரையாற்றினார்.

அவ்விரு தினங்களில் அக் குக் கிராமத்தில் கூடிய பக்த்ர்கள் எண்ணிக்கை 75000த்துக்கும் மேலே. ஒரே மாத அவகாசத்தில், அந்த புறநகர் கிராமத்தில் போக்குவரத்து சாலை வசதி, கார் பார்க்கிங் வசதி, அத்தனை ஜனங்களுக்கும் டாய்லெட் மற்றும் சுகாதார வசதி, மருத்துவ வசதி, காலை முதல் இரவு வரை வயிறார சாபுதானா கிச்சடி (ஒவ்வொருவருக்கும் க(த)ட்டுப்பாடில்லாமல் 4-5 தேங்காய் பர்பிகள் உட்பட)..

நேரில் பார்த்தவர்களுக்குத்தான், இவ்வனைத்தும் பகவான் பாபா ஒருவரின் சங்கல்ப பலத்தால் மட்டுமே சாத்தியம் என உணர முடியும்.

பகவான் பாபாவின் சுந்தரம் பஜனைகளில் உள்ளம் ஒன்றித்திளைத்த தினங்களும், புட்டபர்த்தியில் அதிகாலை நகரசங்கீர்த்தனமும், பாபா தரிசனமும் நெஞ்சில் நிழலாட, பகவானின் பாதகமலங்களை நினைந்து அவர்தம் திரு உருவக் கோட்டோவியங்களை சமர்ப்பிகிறேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *