சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள் !

இங்கிலாந்து குளிர்காலம் எனும் உறைபனிக் காலத்திற்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளம் கதகதப்பாக உங்களுடன் மடல் மூலம் ஒரு உரையாடல்.

இன்றைய காலை தொலைக்காட்சிச் செய்தியிலே கேட்ட ஒரு தகவல் என் நெஞ்சை உறைய வைத்தது.

இங்கிலாந்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிருவர்களுக்கான திகாரியை பி.பி.சி காலநேர நிகழ்ச்சியில் பேட்டி கண்ட பழுது அவர் கூறினார் இங்கிலாந்தின் ஒரு கணக்கெடுப்பின் படி இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கும் அதிக அளவில் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள் என்று.

அப்போது அவ்ரைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்ட கேள்வி , சிறுவர்கள் கணிணியில் இவ்விணையத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள் என்றால் பெற்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே !

காலம் மாறுகிறது, காலாச்சார அடையாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது, தகவல் தொழில் நுட்ப பரிமாற்றங்கள் துரித அள்வில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது யதார்த்தத் தேவையாகிறது.

ஆனாலும் ,

மனிதர்மத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட முடியுமா? விஞ்ஞானம் த்தனை தூரம் முன்னேறினாலும், காலம் எத்துணை அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், நாகரீகம் எவ்வளவோ வகையில் மாறியிருந்தாலும், தாய் தாய் என்பதும், தந்தை தந்தை என்பதும், தாரம் தாரம் என்பதும், சகோதரர்கள் சகோதரர்கள் என்பதும் மாற்றம் கண்டிட முடியுமா?

நாம் எமது மனதின் கட்டுப்பாட்டை மனித தர்மத்தின் தார்மீக எல்லைகளைக் கடக்க அனுமதித்து விட்டு அதற்கு காலத்தின் மாற்றத்தைக் காரணமாகக் கூறி நியாயம் கற்பிக்க முயல்வது நகைக்கப்பட வேண்டிய விடயமாகும்.

குழந்தைகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டதும் எமது கடமைகள் முடிந்து போய் விடுகின்றனவா?

இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தப் போகும் தூண்கள். அவர்கள் மனிதன் எனும் தர்மத்தின் அடிப்படை நியாயங்களைக் கற்ரிருந்தால் தான் அமைதியான ஒரு அகிலத்திற்கு அவர்களால் துணை போக முடியும்.

இன்றைய இந்த அவசரமான காலகட்டத்திலே நாமனைவரும் வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எம்மை பணம் சம்பாதிப்பதன் வழிகளுக்குள் முழுமையாகப் புதைத்துக் கொண்டுள்ளோம்..

நவீன கால தேவைகளின் அடிப்படியில் வாழ்வில் வசதிகளைப் பெருக்கிக் க்லொள்கிரோம் எனும் பெயரில் பெருகும் வசதிகளை அனுபவிக்கக்கூட முடியாத வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

வருங்காலத் தலைமுறைகளுடன் வாழ்வின் முக்கிய தார்மீக விதிகளை விளக்ககூடிய வகையில் எமது நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் பெரும்பான்மையான்வர்கள் தமது குழந்தைகளுடன் தாம் விரும்பிய அளவில் நேரத்தைச் செலவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய சீழலில் தற்காலக் குழந்தைகளின் கைகளில் கணிணிஎன்பது ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டது. பதின்ம வயதுகளில் தாம் ஒரு மடிக்கணனிக்கோ அல்லது கயடக்கக் கணணிக்கோ சொந்தக்காரர்கள் இல்லையென்றால் அது ஏதோ தாம் குறைவானவர்கள் என்று கருதுமளவிற்கு இவைகள் அவர்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இது அவர்களது அறிவை விஸ்தரிப்பதற்கு பயன்பட்டால் கூட அவர்களின் பாவனையைத் தொடர்ந்து கண்காணிக்குமளவிற்கு அதிகமான பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை.

இத்தகைய சூழலினால் இக்கணிணிகளின் மூலம் தவரான இணையத்தளங்களை தற்செயலாகவோ அன்றி வேண்டுமென்றோ பதின்ம வயதுச் சிறுவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது..

எமது நாடுகளின் வருங்கால வரலாற்றைச் சிறப்பு மிக்கதானதாக மாற்றுவதில் எமது சந்ததியும் பங்குபெற வேண்டுமானால் மனித வாழ்கையின் தார்மீக பொறுப்புகளின் பெருமைகளை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சரியான வாழி முறையை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும்..

பாடசாலைகளுக்கு ஒழுங்காகப் போகிறார்கள் தானே ஒழுக்கத்தின் போதனையை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கவனயீனமாக இருந்து விட்டுப் பின்னால் புலம்புவதால் எவ்விதப் பயனுமில்லை

இன்றைய உலகில் தமிழர்களாகிய நாம் பரந்து பட்டு உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறோம். தாம் வாழும் நாடுகளில் எமது இளைய தலைமுறை பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்குட்பட்ட பல்வேறு இனத்தினருடன் பழக வேண்டிடி ஏற்படுகிறது. இந்தச் சந்திப்புகளில் எமது அடிப்படை வாழ்க்கைத் தார்ர்மீக நெறிகள் தொலைந்து போய்விடாமல் இருப்பதர்கான பொருப்பு பெற்றவர்கள் வசமே இருக்கிறது.

கலாச்சாரம், பழகும் பண்பு, ஒழுக்கமான வாழ்க்கை என்பவனவற்றை முன்னேற்ரத்து தடையான கால்விலங்காக மாற்றாமல் உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தை சரியான திசையில் செலுத்தக்கூடிய ஒரு கடிவாளமாக்குவது ஒன்றே எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வை உயர்ந்ததாக்கும்.

அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *