சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

0

கவிஞர். காவிரிமைந்தன்

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

காலம் எத்தனையோ கவிஞர்களை பிரசவித்திருக்கிறது! அவர்களும் தங்கள் திறமையால்.. தமிழ் மொழியில் அற்புதங்களைப் படைத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணதாசன் அவர்களும் இந்தவழியில்தான் வந்து சென்றார்! ஆனால் சாதாரண ஜீவமரண கணக்குக்குள் அடங்கிவிடாத ஜீவநதியாய் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார் தன் படைப்புகளால்! அவரின் கவித்துவம் எளிமையில் பிறக்கிறது! நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அவரும் கைப்பிடிக்கிறார். ஆனால் கவிஞரின் வசப்பட்டதும்.. அந்த வார்த்தைகள் பெருமையுறுகின்றன. நம்மை உடனே வியப்பில் தள்ளிவிடுகின்றன!

இயற்கையாக நடக்கும் எதுவும்கூட கவிஞனின் கைவண்ணத்தால் இன்னும் மெருகேறுகிறது! இறைவனை .. இந்த உலகில் கண்ணதாசன் இழுத்துவந்ததைப் போல் இன்னொருவர் செய்ததுண்டா என்றால் சந்தேகமே!

கடவுளை வணங்கிப் போற்றி வந்தனை செய்தவர்தான் என்றாலும் பாடல் வரிகளில் நியாயம் கேட்கத் தயங்காத எதார்த்தவாதியாக பரிணமிக்கிறார்! பாடலின் பல்லவி தவிர மூன்று சரணங்கள்.. திரைக்கதைக்காக எழுதப்பட்ட பாடல்தான் என்றாலும்.. இதில் உள்ள நியாயங்கள் திரைப்படத்தைத் தாண்டியும் உணரப்படுகிறதே!

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
அம்மா அம்மா அம்மம்மா
பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
அம்மா அம்மம்மா
பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

திரைப்படக்காட்சியில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் பண்பட்ட நடிப்பில் பார்ப்பவர்கள் கண்ணில் நீர்வரும்! இசையின் வடிவமோ திரையிசைத்திலகத்தின் கைவண்ணத்தில் உணர்வுகளை மீட்ட வருகிறது! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சரஸ்வதி சபதம் திரையோவியம். இப்பாடலைக் கேட்கும் போது இதயத்தின் துடிப்பு ஏனோ இருமடங்காகிறது!!

http://youtu.be/xjiRbHe-VG4

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
அம்மா அம்மா அம்மம்மா
பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
அம்மா அம்மம்மா
பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

 

Song: தாய் தந்த பிச்சையிலே – thai thantha pichchaiyile
Movie – திரைப்படம்: சரஸ்வதி சபதம்
Singers: P. Suseela பாடியவர்: P. சுசீலா
Lyrics: Poet Kanndasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan, இசை: K.V. மஹாதேவன்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
 
 
அன்புடன் 
காவிரிமைந்தன் 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *