​பொன் ராம்

பின்னால் வந்த வண்டி நின்ற பின் உலகம் சுற்றி மருந்து வாங்க சென்றபோது பின்னால் வந்தனர். அந்த மருந்து சாப்பிடவே முடியவில்லை. பல சைட் எஃபெக்ட். பயத்தால் அங்கு மறுபடி புத்தாண்டு டபுள் இயர் தமிழுக்குச்  செல்லவில்லை. அந்த மருந்தை நிறுத்தி தேர்ச்சி மதிப்பெண் வந்த பிறகுதான் தூக்கி எறிந்தேன். மறுபடி தேவையில்லாம எழுதுவானுங்க……..நின்னு போய்டுச்சுன்னா கண்ணகி கண்ணீரிலேயே அழுகியிருக்க வேண்டியதுதான் கல்லறையில. ஹரிஹரன் வெகுநேரம் நெட் பார்ப்பதால் வந்தது எனக்கூறியதால் வெகு நேரம் யோசித்தேன். ஏன் மாறுபாடு? மருந்தும் வேறுபாடு?………………

செத்து வச்சேன்னா பத்தினி இல்ல……சாபம் பலிச்சிட்டுதுன்னு சந்தோஷப்படணும்……..கடவுளை உள்ளிருந்தே வேலிருக்க வினையுண்டா ! இல்லையா என ஆராய்ந்தேன். அப்போதும் உடல் இப்படி இருந்தது. இன்னமும் மோசம். கடைக்குப் போய்த்தான் ஆக வேண்டிய தேவையில் பகலவனிடம் சென்றேன். அது செலவு நிறைய என்பதால் வீட்டிலேயே யோகக்கலை பயின்றேன். அமைதி அதுதான் எனது உடல்நலத்தைக் காத்தது. மருந்தே தேவையில்லாமல் காத்தது. அதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவு. நான் மனத்திடமாக இருக்க வேண்டும். அன்றிலிருந்து குப்பையான பல நினைவிலிருந்து விடுபட்டேன். உடல்நலம் தெளிவாகியது. எதையும் புரிந்து கொள்ளாத நிலைத் துணையுடனும், வெளியே அனுப்பாத நிலையுடனும், போராடிய மனதுடனும் அரவிந்தன் மட்டுமே உற்ற துணை. வந்த இடம் தேடினால் அங்கேயும் நதிவழி, ரிஷி வழி எடுப்பானுங்க…..படு வீக்குங்க அங்க….செத்தே போய்டுவானுங்க……….குடும்பமே சமாதியாயிடும்.  பாத்தேன்…அதான்நான் மட்டும் தனி ரோஸ் போல……… சொன்னா குறைஞ்சா போயிட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்…… யாரோ இட்ட அகிற்புகையின் வாசனை அவள் நெஞ்சை என்னமோ செய்தது.

சென்றேன் மணம் வீசும் மலர்கள் நிறைந்த தோட்டத்திற்கு……சென்றேன் பிடித்ததை எடுத்துவர…….மலரைப் பறிக்க தோட்டக்காரன் காசு கேட்க….சேர்க்க சித்தப்பாவை நாடினேன். செயற்கை மலருக்கு டைம் உள்ளது. வாடகை மலர் ஒன்று இப்போது இருக்கட்டும் என பல வருடக் கனவை நிறைவேற்ற சென்று கொண்டிருக்கிறேன்.இடையில் குருதி ஓட்ட பாசங்களின் அணிவகுப்பில் போராட்டம்…… தப்பு செய்யக்கூடாது. அது நாம யாரு மேல பாசமா இருக்கமோ அவங்களைப் பாதிக்கும்…இது என் வாழ்வில் கண்டது………….தனியே அமர்ந்தே பழகினேன்.மைண்ட் ரிலாக்ஸாக…..பாசம் என்னை இழுக்கக் கூடாது.. போகும்வழி நெருங்கி விட்டதென்று நினைத்தேன். அதையும் மீறி மகள் பாசம் அலுவலகத்திலும் இழுத்தது. அதுதான் நான்கு அடி கண்ட புதுமை……..

இருப்பேனோ….இல்லையோ……………சாதாரண பணி…விட்டாலும் என்னை விட்டா ஆளா இல்லை….சைலண்டாக விலக நினைத்தேன்.

நீ என்ன செல்வது….சாக்கடையில் நீயும் கிட கணபதி இருந்த இடத்தை வளைத்த கதை வெளியே வந்தால் என்ன செய்வது…..மறைந்தேன்……இது தான் ஹூயுமன் ரைட்ஸா! கேள்வி கேட்டேன். மௌனமாக மொபைலில் அகிலமாக அமர்ந்திருந்தவளிடம்…………….வேலிருக்கிறான் என நினைத்தேன். சென்றேன் கடவுளிடம்….விடை கிடைத்தது. சன்னலைத் திறந்து பார்த்தாள். வெளியே பத்து நாள் தாடியுடன் கண்தெரியாமல் பிஞ்ச செருப்புடன் வெற்று வெளியில் வழி தேடிக் காற்றில் கை வீசிக் கொண்டிருந்த பெரியவரைப் பார்த்தாள். சற்று அருகில் சிரித்தபடி வேடிக்கை பார்த்த லேப்டாப் விற்றுக் கொண்டிருந்த இளைஞனையும் பார்த்தாள். நடந்து போனால் வழி சொல்லும் மக்களும் இருக்கிறார்கள்.குருடனுக்கு வழி தெரியவில்லை என்றாலும் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள். படிக்கும்போதே பாடத்தை மறந்திருப்பார்கள் போலத் தெரிகிறது………அடுத்தவங்க வீக் பாயிண்டைப் பிடிச்சாத் தான ஜெயிக்க முடியும்…….

பிஸ்தா ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல் இல்லை…காரணம் உலகம் திருந்த வேண்டும்…அதுவரை மேகம் நிலவை மூடியது போலத்தான் இந்த உலகம்…………….விவேகானந்தர் சொன்ன 100 இளைஞரைத் தேட வேண்டும்……….. எழுதி முடித்த பர்ப்பிள் பேனாவின் முனையை இடது கையால் ஒடித்தாள் புஷ்கரணி. இதுதான் கடைசி அத்தியாயமாக இருக்கலாம்…ஊக்குவித்த கைகள் மாறுகின்றன…………எனக்கிருப்பதோ ஒரே கை…..எழுது….. என்றவனும் மறைந்து கொண்டிருக்கிறானே தவிர வெளியில் வர மறுக்கிறான். இத்தனை பேர் வைத்திருக்கிறான்……… ப்ச்……. வலது தாளை ஒரு முறை படித்தாள்…….யானை புக்மார்க்கைப் பலமுறை தேடினாள்…….கிடைக்கவில்லை….சுவரில் ஆடிய ஃபோட்டோ மரத்தில் பொக்கிஷம் போல் வைத்திருந்தாயே….தூக்கிப் போட்டாயே குப்பைத் தொட்டியில்……………..வேண்டுமென்றே விதவிதமான பேனா யாருக்கு என்ன பிடிக்கும் என்பதற்காக….எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்தாளோ…..பாண்டிச்சேரி பூ கொடுத்தவள்……. எம்பாசிங் வடிவத்தில் திருமகள் சிரித்தாள் ப்ளு கலர் வடிவத்தில்.. ‘அமேசான்’ ஆற்றுப் படுகையில் வாழும் காட்டுவாசிகள் பற்றிய அதிசயமான ஒரு குறிப்பை விழுந்து விழுந்து நெட்டில் படித்தாள்.

குறிப்பிட்ட காட்டுவாசி இனத்தார் வாழும் கிராமங்களில் ஒரு சிறிய மரம் இருக்கிறது. அந்த மரத்தின் மூலமாக, அவர்கள் அடுத்த கிராமத்துடன் தொடர்பு கொள்கிறார்கள்! என்று……இந்த காலத்தில் இப்படியா? அடுத்தவர் மனதையும் ஆராயும் குறிப்பு தேடிச் செல்லலாமா என யோசித்தாள்.

தூண்டிய விளக்கின் சுடரைப் பார்க்க எழுந்து  சென்றாள் புஷ்கரணி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *