காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: இந்த வாரம் வெளியூரிலிருந்து வரும் உறவுகள் சந்தோஷத்தோடு, சிறு செலவுகளையும் சேர்த்தழைத்து வருவார்கள். முதியவர்கள் உணவு வேளைகளை தவற விடாமலிருப்பதோடு அதிகம் வெளியில் அலைவதையும் தவிர்த்து விடுதல் அவசியம். பொறுப்பில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைகள் சீராக நடந்து கொண்டிருக்கும். பாராட்டை பெறக்கூடிய அளவிற்கு கலை நிகழ்ச்சிகள் கச்சி தமாய் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். .யோசித்து நிதானமா கச் செயல்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களும் விரும்பிய பலனைத் தரும் என்பதை பெண்கள் நினைவில் கொண்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்: கலைஞர்கள் தொழிலில் முழு கவனம் செலுத்தி வர, தங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பங்குதாரர்களுடன் ஆலோசித்து முடிவெடுக் கும் பழக்கத்தை கடைபிடித்தால், புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாகும். இந்த வாரம் ஏதாவது ஒரு வழியில் பணம் செலவழியும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சேமிப்புக்கு என ஒரு தொகை ஒதுக்கிவைத்தால் அவசர செலவுக்கு கை கொடுக்கும். மாணவர்கள் வேகம், வேகம் என்று செல்லும் போது விவேகத்தையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் வெற்றிதான். பணியில் இருப்பவர்களுக்கு தேடி வரும் புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

மிதுனம்: வியாபாரிகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தாலும், அதன் மூலம் வரும் லாபம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.மாணவர்கள் வெளி வட்டார பழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது நல்லது. பெண்கள் வீணான சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும் மனதில் குடியேற விடாமலிருந்தால், திறமைகள் உங்கள் உயர்வுக்குக் கை கொடுக்கும். பணியில் இருப்போர் அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியின் ஊடே அதிக அலைச்சல், எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.எனவே நிதானமாக செயல்படுவது நல்லது.

கடகம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளில் அகலக்கால் வைக்கா மலிருந்தால், நஷ்டம் என்பதிராது. இருந்த இடத்தில் இருந்து வேலை வாங்கிக் கொண் டிருந்தவர்கள் இந்த வாரம் ஓடியாடி உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். வாழ் வில் இனிமையும், பெருமையும் தங்க வேண்டுமா? வாழ்க்கைத்துணை சொல்லும் ஆலோச னையை ஏற்றுச் செயல்படுங்கள். கல்வியின் மீது கல்வியின் மாணவர்களின் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த நலிவுகள் நீங்குவதால், பெண்கள் புதுத் தெம்புடன் வளைய வருவதோடு, விடுபட்ட வேலைகளை முடிக்கும் திறமும் கூடும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் நெருக்கமான நபரை சந்தித்து அவர் மூலம் முக்கியமான காரியம் ஒன்றை சாதித்துக் கொள்வீர்கள்.பெண்கள் காரிய ங்களில், கவனமாக இருந்தாலும், சில எதிர்பாராத தொல்லைகளை சமாளிக்க வேண் டியிருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் எதிர்பார்த்த லாபமும், நல்ல பெயரும் கிட்டும். முதியவர்கள் உணவுப் பழக்க வழக்கம், தேவையான தூக்கம் இரண்டிலும் கவனமாக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கடிதம் மூலம் வரும் செய்திகள் சந்தோஷத்தை சுமந்து கொண்டு வரும். பெற்றோர்கள் கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் .

கன்னி: பெற்றோர்கள் எந்த ஒரு செயலையும், திறம்பட செய்யும் பிள்ளைகளை தக்க சமயத்தில் பாராட்டுங்கள். அது அவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களில் இறங்கும் முன் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது.பெண்கள் தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான யோசனையோடும் செயல்படுவார்கள். மாணவர்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைத்தால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமிராது. மழைக் காலங்களில் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

துலாம்: முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே கௌரவமான பதவியில் உங்களை அமர வைத்து விடும். பெண்கள் குடும்பத்தில் பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும்.மாணவர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிப்பதால், சவாலான பணிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த வாரம் உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், அதற்கேற்ற செலவுகளும் கூடும்.

விருச்சிகம்:இந்த வாரம் கலைஞர்கள் வாழ்வில் திருப்பங்களுக்கும், விறுவிறுப்புக்கும் நிறைய இடமிருக்கும். பெண்கள் மனம் விரும்பும் போல் வீட்டை அழகு படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றில் முனைப்புடன் இறங்குவீர்கள். மாணவர்கள் சில சிரமங்களைத் தாண்டி வேலைகளை முடிப்பார்கள். வேலை செய்யும் சூழல், அதிகாரிகளின் போக்கு ஆகிய வை சாதகமாக இருப்பதால், பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை ,கசப்பான அனுபவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றமான நிலை காண்பர்.

தனுசு:மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்தும், திட்டமிட்டும் செயல்பட்டால் எதிலும் வெற்றிதான்! போட்டிகள் மற்றும் பொறாமைகளின் நடுவே எதிர்நீச்சல் போட்டு கலை ஞர்கள் தங்கள் வய்ப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வர். இந்த வாரம் குடியிருக் கும் வீட்டை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு சிலர் ஆளாகலாம். பெற்றோர்கள் பிள்ளைக ளைப் பற்றிய வீணான கவலை நீங்கும் வண்ணம், அவர்களின் செயல்பாட்டில் தெளிவு காணப்படும். பெண்கள் எந்த சமயத் தில் எதை செய்ய வேண்டும், எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை உணர்ந்தாலே குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிராது. பணியில் உள்ளவர்கள் மறதியால் சிலவற்றிற்கு வீண் தண்டம் கட்ட வேண்டி யிருக்கும்

மகரம்: நீடித்த கடன்கள் விலகுவதால் பெண்கள் மனதில் நிம்மதியும், முகத்தில் மகிழ்ச்சியும் மலரும். கலைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் போது, எழும் தடை களைத் தவிர்க்க தீவிர முயற்சி, இதமான அணுகு முறை இரண்டையும் கடைப்பிடி த்தல் அவசியம். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும் என்பதை நினைவில் கொண்டால், பாடங்கள் சுமையாய்த் தோன்றாது. வியாபாரிகள் நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டபின், காசோலைக ளை பிறர்க்கு வழங்குவது நல்லது. இந்த வாரம் வழிப் பயணங்களில் சிறு விரயங்களும் அதனால் மன வருத்தமும் உருவாகலாம்.

கும்பம்: வியாபாரிகள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் முழுமையான லாபத்தை பெறலாம். தினசரி பணிகளில் குழப்பங்கள் உருவாகாமலிருக்க பெண்கள் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பல சலுகைகளில் சிலவை மட்டுமே நிறைவேறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். முதியவர்கள் சின்ன விஷயங் களுக்காக பிறர் மேல் சீறிப் பாய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதி குலையாது. வேலையின் பொருட்டு அடிக்கடி வெளியூர்களுக்கு செல்பவர்கள் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது.

மீனம்: மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றா மலிருக்கும் பெற்றோர்கள் செலவுக்கு போதிய பணம் தந்தாலும், பிள்ளைகள் பணம் செலவழிக்கும் வழியின் மீது கவனம் வைப்பது நல்லது.  வெளிவட்டாரத் தொடர்புகள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராதென்பதால், வியாபாரிகள் ஆடம்பரச் செலவு களைக் குறைத்துக் கொள்வது நல்லது. சளி, காய்ச்சல் ஆகியவைகளின் பாதிப் பில்லா மலிருக்க, பெண்கள் சுகாதாரமான குடி நீரை பயன்படுத்துதல் நலம். சுய தொழில் புரிபவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் வருகின்ற லாபம் குறையாமலிருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *