சக்தி சக்திதாசன்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

அன்பினியவர்களே!

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

“மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா” எனும் வாசகம் எந்த அளவிற்கு யதார்த்தமானது?

ஒருவர் எம்மைத் தாக்கி விட்டார் அன்றி தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார் இல்லை எமது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

இவைகளை நாம் மன்னிப்பது என்பதும், உம்மை உடலளவில் தாக்கி உள்லத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டவர்களை மன்னிப்பது என்பதற்கும் அபல வேறுபாடுகள் இருக்கின்றன.

மனித மனதில் மன்னிப்புகளுக்கும் எல்லைகள் உண்டு என்பதே உண்மையான ஒரு கருத்தாகப் படுகின்றது.

எதையும் எப்போதும் எப்படியும் மன்னித்து விடலாம் விட வேண்டும் என்பது பார்த்தையளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறையில் சாத்தியமாகும் எனும் கேள்வி எழாமல் இல்லை.

நான் சமீபத்தில் இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இத்தகிய வினாக்களைத் தொடுக்க வைத்தது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

ஒரு மயிரை இழந்தாலும் உயிரை விட்டுவிடும் கவரிமான் என்பார்கள். அது போல பெண்களுக்கு மானம் என்பது அவர்களது உயிரைக் காக்கும் கவசம் போன்றது.

மானத்தை ழப்பது என்பது பெண்களுக்கு உயிரை இழப்பதற்குச் சமானம். ஆனால் அம்மானம் பலாத்காரமாக அப்பெண்ணிடம் இருந்து பறிக்கப்படும் போது கூட அப்பெண் உயிரை விடுவது தான் ஒரே முடிவா?

மூர்க்கத்தனம் கொண்ட ஆண் வர்க்கம் தமது மிலேச்சத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு பெண்களைன் மீது பலாத்காரத்தைப் பிரயோப்பதனால் அப்பெண் ணின் மானம் பறி போவது உண்மைதான் அதற்காக அப்பெண் உயிரை விட்டு விடுவது ஏற்றுக்கொள்லப்பட்க் கூடியதொன்றா?

மனதைப் பாதிப்புக்குள்ளாஅக்கும் மிகவும் காராசாரமான கேள்வி இதுவல்லவா?

நான் இப்போ குறிப்பிடப் போகும் சம்பவம் மன்னிப்பு எனும் பதத்தின் அர்த்தத்தை அதன் எல்லைகளுக்கப்பால் கொண்டு சென்று நிறுத்துகிறது.

அப்படி என்னதான் நடந்தது? நீட்டி முழக்காமல் விஷயத்தைச் சொல் என்கிறீர்களா? அவசரப் படாதீர்கள் இதோ,

லண்டனை வதிப்பிடமாகக் கொண்டவர் 40 வயது நிரம்பிய செல்வி.காட்ஜா ரோசென்பேர்க்.

கடந்த 2008ம் ஆண்டு இவர் 16 வயதே நிரம்பிய இளஞனினால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டார்.

இவரது கற்பழிப்பைத் தொடர்ந்து இதே இளஞன் மற்றொரு 51 வயதான் பெண்மணியையும் கற்பழித்துள்ளார்.

இவ்விரு கற்பழிப்புக் குற்றங்களையும் ஒப்புக் கொண்ட இவ்விளைஞனுக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது

இந்த காட்ஜா ரோசென்பேர்க் எனும் பெண் கடந்த வருடம் குர்றசெயல் மீள்பிரிவு அதிகாரிகளின் அனுசரணையுடன் தன்னைக் கற்பழித்த அந்த இளஞனை சிறையில் சென்று நேரடியாகச் சந்தித்து உள்ளார்.

எதற்கு என்று கேட்கிறீர்களா?

அவரைத் தான் மன்னித்து விட்டேன் என்ரு அவருக்கு தான் நேரடியாக தெரிவிப்பதற்காகவே.

கற்பழிப்பு மற்றைய பெண்களுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியைத் த்னக்கு ஏனோ ஏற்படுத்தவில்லை என்கிரார் இவர். இத் தாக்குதல் தனது வாழ்வை மிகவும் அதிக அளவில் பாதித்திருந்தாலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தன்னைப் பாதிக்கவில்லை என்கிறார்.

தான் வாழ்வில் இதனால் மிகவும் கவ்பலைக்குட்டபட்டதுவும், பல விடயங்கள் தன் வாழ்வில் பிழையாகிப் போனதுமே தனக்கு ஏற்பட்ட விளைவுகளே தவிர தான் தாக்கப்பட்டதாக உணரவில்லை என்கிறார்.

தான் அவரிடம் நேரடியாகச் சென்ரு மன்னித்து விட்டதாக கூர எண்ணியதன் நோக்கம் அவருக்கு சிரையில் இருந்து வெளியே வந்ததும் வாழ்வதற்கு பிடிப்பு ஏற்படுத்தவே என்றும், இப்படியான செய்கையின் மூலம் அவரை வெட்கித் தலைகுனியச் செய்வதினால் அவர் இனிக் குற்றச் செயல்கள் செய்யாமல் தவிர்க்க உதவலாம் என்பதனாலுமே என்கிறார் இவர்.

தன்மீது மூர்க்கத்தனமாக மற்றொருவரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைச் சமாளித்து அந்நிலைமையிலும் தனது வாழ்வைத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த வரது துணிச்சலை பல முன்னனி மாதர் அமைப்புகள் பாராட்டியுள்ளன.

ஆம் மனிப்பு என்பதன் அர்த்தத்தையே மார்றி அமைத்து விட்டார் இந்த வீராங்கனை.

ஆனால் இத்தகிய செயலினால் இவரது உள்ள உறுதியும், மனிதாபிமானும் உயருகிறதே ஒழிய “கற்பழிப்பு: என்னும் படுபாதகச் செயல் எந்த விதத்திலும் அங்கீகாரம் பெறவில்லை.

ஒர் பெண்ணின் மீது இத்தகிய தாக்குதலை மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொடூர மனம் கொண்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? எனு7ம் வாதமும் ஒருபுறத்தில் எழுவது நியாயமே!

இருப்பினும் தன் மானத்தைப் பறித்த அக்கயவனின் உள்லத்தை மாற்ற மன்னிப்பு எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்த இவ்வீராங்கனையும் ஒரு விதத்தில் ஒரு கவரிமான் தான்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *