கவிஞர் காவிரி மைந்தன்

கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை.

புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள வெற்றி!! அனைத்துப் பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா!!

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு அத்தை மடி மெத்தையடி..
மன்னவனே அழலாமா? பக்கத்துவீட்டு பருவமச்சான்..

2004ஆம் ஆண்டு கவிஞர் வாலி அவர்களுக்கு பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் விருது வழங்கி பாராட்டு நடத்தியபோது இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட செய்தியை இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கவிஞர் வாலியின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட நேரமில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.. ஒன்று தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. மற்றொன்று கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

என்ன சொன்னார் தெரியுமா.. இந்தக் கவிஞர் ஒருவர்தான்.. பாட்டுவரியின் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு அதன் அடுத்த வார்த்தையை சொல்லாமல் .. ஆனால் அந்த வார்த்தையையே நினைக்க வைத்தவர்.. என்றார். ஆம்.. இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் .. விளக்கம் கிடைக்கும்!

முதல் இரவின் முன்னதாக நடக்கும் இந்தக் காட்சியில் நாயகியைத் தோழி துவள வைக்கிறாள்.. இன்பத்தை எண்ணித் துடிக்க வைக்கிறாள்.. வஞ்சியின் நெஞ்சம் வெட்கத்தில் தவித்திருக்க.. வேடிக்கை அல்லாமல்.. அனுபவக் கதையைப் பாட்டில் வைக்கிறாள்.. இன்பத்தின் அரிச்சுவடி இது என்று சொல்லி வைக்கிறாள்.. அதையும் முழுதாய் சொல்லிவைக்காமல்.. அங்கங்கே புள்ளிவைக்கிறாள்.. கேளுங்களேன்..

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதல் உறவு

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது….
வந்ததம்மா மலர் கட்டில்
இனி வீடினில் ஆடிடும்…..

ஆயிரம் …

வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே ஊஹும்
தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க….
ஆயிரம் …

யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி
ஆயிரம் …

http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM
http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – Aayiram iravugal varuvathundu

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *