திருமால் திருப்புகழ்….(3)
கிரேசி மோகன்
தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த -தனதான
“மாலை நாடகம் மதியம் உறக்கம்
காலை ராவினில் கவிதை வழக்கம்
நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
கோல வாகன மயிலில் குறத்தி
தேவ யானையும் அருகில் இருக்க
வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம
சேலை மோகமும் சினமும் செருக்கும்
ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
நானை யாரென நினைவு படுத்தி
பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்
கோலம் கோவணம் கடமை இருப்பு
பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
வாழ்வு நானுற வழியை வகுத்து
கோழை யானவில் விஜயர் தமக்கு
கீதை யாலுரம் அளியும் சமர்த்த -தருவாயே
காலில் பூமகள் களைய சொடுக்கை
பாலி னாழியில் படவி டமெத்தை
சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
ஏறு வாகனம் வினதை பிறப்பில்
சேரு மோகனென் அகம தில்நிற்க
சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….
படத்திற்கு நன்றி :
https://www.google.co.in