கண்ணன் திருப்புகழ்
கிரேசி மோகன்
“கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….
படத்திற்கு நன்றி:
https://www.google.co.in/search
கண்ணன் திருப்புகழை மிக அருமையாகப் படைத்தளித்துள்ள திரு. கிரேசி மோகன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
அன்புடன்,
மேகலா
அருமை. அழகான வரிகளில் கண்ணனைப் பாடியுள்ள தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.