காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும் .

ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள் புதிய உணவு வகைகளை விலக்குவது நலம். பெண்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித் தனமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலம் சுமாராக இருக்கும். இருந்தாலும் பித்தம் போன்ற  உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.   பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய வேண்டிய பலனோடு  எதிர்பார்த்த  பாராட்டும், புகழும்  தானே வந்து  சேரும்

மிதுனம்:   இந்த வாரம்  கலைஞர்கள்   மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் இறங்கும் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவில் விஷயங்கள் அமையாமல்,  சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும் வரை பொறுமையாகசெயல்படுவது அவசியம்.. பொதுவாக இந்த வாரம் மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.     பெண்கள் பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும்.

கடகம்: முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள்   அவ்வப்போது  வழக்குகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள்  உடன்  இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும்.   லாபத்தைப்பெற வியாபாரிகளும் பணியாளர்களோடு  சேர்ந்து  உழைக்க வேண்டியது இருக்கும் . வேலையில் இருப்பவர்கள் புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்  பளு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும்   கலைஞர்கள்   சக கலைஞர்களிடம் தங்கள் கோப தாபத்தைக் கொட்ட வேண்டாம்.

சிம்மம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்த சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

கன்னி: பணியில்  இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு , இந்த வாரம் அனுகூலமான  தகவல் வந்து சேரும்.   பெண்கள் இல்லத்தில் அவ்வப்போது தோன்றும்  சிறிய பிரச்னைகளை, பெரிதாக வளரவிடாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்  .  தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைப்பதால், மாணவர்கள் புதுத் தெம்புடன் திகழ்வார்கள்.  கலைஞர்கள்  உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும்.

துலாம் : மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமலிருப்பது நல்லது. வெளி இடங்களில் கவனமாக நடந்து கொள்வதன்  மூலம் கலைஞர்கள் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதைத் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பி விடலாம்.  . சிறு தொழில் புரிபவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றியோடு, வேண்டிய லாபமும் வந்து சேரும் . பெண்கள் குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும்.

விருச்சிகம்; பெண்கள் எப்போழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறலாம்: புதிதாய் வேலையில் சேர்ந்தவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள்.  இந்த வாரம் கலைஞர்களுக்கு  புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் சிக்கனமாக இருப்பது அவசியம். . வியாபாரிகள் இது வரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக தொழிலாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பார்கள்.

தனுசு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாக குறைந்து விடுவதால், வியாபாரிகள் விரும்பியவாறு விரிவாக்கப் பணிகளை செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.  இந்த வாரம் மாணவர்கள் அரசு அளிக்கும்  சலுகைகளை  பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்னைகளும் தீர்ந்து விடும்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள கலைஞர்களுக்கு உழைப்பு கை கொடுக்கும்.   வேலையில் இருப்பவர்கள் பணிகளைத் திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்த போதிலும் கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் .  பெண்களுக்கு  மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மகிழும் வாய்ப்பு  வந்து சேரும்.

மகரம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.   தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் நடிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

கும்பம் இந்த வாரம்  மாணவர்களுக்கு  புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, என்று பொழுது போகும்.  பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து இணக்கமாக நடந்து கொள்வார்கள்.   பொது வாழ்வில் இருப்பவ ர்களுக்கு  பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும்  . கலைஞர்கள் எந்த சூழலிலும் அமைதிக் குறைவு, பதற்றம் ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம் .  வியாபாரிகள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ,இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம். குடும்ப விவகாரங்களில்  பெண்கள் பிறரை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

மீனம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும்.. மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும்   பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது.  பெற்றோர்கள், கல்லூரி செல்லும்  பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *