திருமால் திருப்புகழ் (7)
கிரேசி மோகன்
பெருமாள் திருப்புகழ்….
தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன
தனதய்யத் தான தாத்தன தானன -தனதான….
—————————————————————————————————————–
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
——————————————————————————–
“ஒருகள்ளக் காதல் வாட்டிட வேடுவ
குறவள்ளிக் காக காட்டினில் மேவிடும்
சுரரில்லக் காவல் சூர்ப்பகை வேலவன் -முறைமாம
பலவெள்ளிக் காசு பார்ப்பினும் ஊழவன்
உனையள்ளிப் போக வீட்டிடை ஏகுமுன்
வரமள்ளித் தாராய் வாய்த்திட சோணையின் -ரமணேச
குரு,அய்யப் பாடு ஆக்கிடும் ஆணவ
மதையள்ளிப் போடும் சாக்கில்வி சாரணை
புரிவுள்ளத் தாழம் பூத்திடும் மாமெனும் -உபதேசம்
மனதுய்யப் ,பாதம் வீற்றிட மாதுபொன்
அலைவெள்ளப் பாலில் போட்டிடும் சேடனில்
அறிபள்ளிக் கார ,ப்ராட்டியர் சூழவந் -தருள்வாயே
முறைஅவ்வைப் பேதை கூட்டுடன் ஏகிட
இலைவில்வக் காரர் வீட்டினில் சேரவும்
தலைபெய்அத் தோளில் தூக்கிய வேழனுன் -சுடராழி
தனைகவ்வக் காதின் நாற்கர ஆடலில்
நகையள்ளித் தூவும் மேய்த்திடும் கோகுல
உறிநெய்யைப் பாலை ஆய்ச்சியர் ஏசிட -களவாடி
உறுகொள்ளைக் கார மூர்த்தியுன் லீலையை
தடைசெய்யத் தாம்பில் பூட்டிடு தாயவள்
உரலள்ளிப் போக வீழ்த்தினை மாமரம் -ஒருநாளில்
கருமல்லிப் பூவுன் காத்திர வாசனை
விரலுய்யத் தீயில் பார்த்தவுன் பாரதி
திருவல்லிக் கேணி பார்த்தனின் சாரதி -பெருமாளே”
படத்திற்கு நன்றி:
http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=1639&page=1
பிரமாதம். அவ்வையின் வேழம் இங்கு வரதன் காத்த வேழமாகிறது.வரதனோ பார்த்தசாரதியின் கோவிலில் எழுதருளியிருக்கிறான். இவனோ தாமோதரன். தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா பாடிய பாரதிக்கும் அருளியவன். நான் புரிந்து கொண்டது இவ்வளவுதான்..அற்புதம். நன்றி.