சிறுகை அளாவிய கூழ் – 7
இவள் பாரதி
அழுதுவிடுகிறாய்
பொலபொலவென ஓடும்
துளிகளைப் பொறுக்க முடியாது
தடுமாறுகிறதென் கைகள்
***
சற்றே உதடுகுவித்து
சடாரென விரித்து
சத்தமெழுப்பி
குதூகலமிட்டு
சிரிக்கிறாள் டோடோ
ஒருமுறை தண்ணீரை
சிறுவாய்க்குள் வைத்துத் துப்புகிறாள்
காற்றில் ஊர்ந்துவரும் துளிகள்
மீண்டும் அவள் வாய்க்குள் செல்ல
அடம்பிடித்து
என் மீது விழுந்து நச்சரிக்கின்றன