திருமால் திருப்புகழ் (22)
—————————————
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன….
———————————————————————————————–
“மதுவன சுக்ரிவ அனுமகு ரக்கினம்
விழுசர ணக்கழல்-உடையோனே
மனைவியின் கற்பினில் மகிழ்வுற புட்பக
மதில்மனை புக்கிடும் -ரகுராமா
யதுகுல விக்ரக ,யமுனைந திக்கரை
யவனவ னப்பென -இடையாயர்
மகளிர்அ ணைத்திட மழலைமு கத்தோடு
குழலைஇ சைத்திடும் -நவநீதா
பதவிரல் நெற்றியை கனகுமு றித்திட
படவிட மெத்தையில் -படர்வோனே
ரமணரு ரைத்திடு ரகசிய வித்தையின்
ரசிகனெ னக்கது -எளிதாக
விதமருள் உக்கிர சுதர்சன சக்கிரம் ,
வலம்புரி சத்தமும் -கதையோடு
சிலையுடை கத்தியும் கமலசு பிட்சமும்
கரமதில் உற்றிடு -பெருமாளே”….
————————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://spiritualmessenger.forumotion.com/t484-the-ramayana-part-6
THIS IS A BEFITTING HONOUR TO CRAZY MOHAN N HIS MASTERY OVER SANTHAM.
MAY HE ADORN VALLAMAI PAGES WITH MORE N MORRE EXCLUSIVE TABS,
Su.ravi