அதிகாலை எழுந்து
குளிர் பனியில்
நடுங்கி தெருவினில்
போட்ட பூக்கோல அழகில்
திளைத்து ஆசையுடன்
அவனுக்கும் காட்ட எண்ணி
தூங்குமவனை எழுப்பி
கையோடு அழைத்து வர
தூக்கம் போன சோகத்தில்
கண் கசக்கி அவன் பார்த்தது
கோலத்தின் மேல் வடித்து செல்லும்
கழிவு நீர் நிறைந்த டேங்கர் லாரியை மட்டுமே..
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.
இவருடைய கவிதைத் தொகுப்பை,’விரிசலுக்குப் பிறகு’, என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.