பத்மநாபபுரம் அரவிந்தன் images

அதிகாலை எழுந்து
குளிர் பனியில்
நடுங்கி தெருவினில்
போட்ட பூக்கோல அழகில்
திளைத்து ஆசையுடன்
அவனுக்கும் காட்ட எண்ணி
தூங்குமவனை எழுப்பி
கையோடு அழைத்து வர
தூக்கம் போன சோகத்தில்
கண் கசக்கி அவன் பார்த்தது
கோலத்தின் மேல் வடித்து செல்லும்
கழிவு நீர் நிறைந்த டேங்கர் லாரியை மட்டுமே..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *