திருமால் திருப்புகழ் (36)
திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்….மூலவர் வராகர்(ஏன வடிவுற்று பூமாதேவியை ஏந்திக் காத்தவர்)….
————————————————————————————————————–
கிரேசி மோகன்
தனனதந்த தான தனனதந்த தான
தனனதந்த தான -தனதான
—————————————————————-
”புரமெறிந்த நேரம் தொழமறந்த ஈசன்
ரதமழுந்து மாறு -புரிவேழன்
வரமிரண்டு ஓடும் குறமடந்தை மேனி
தழுவுகந்த வேலன் -முறைமாம
கரமிரண்டு பானை தனிலுகந்த ஈகை
உணவருந்தி சோணை -அடிவார
வெளியுகந்து ஆமை வடிவிருந்த பாறை
அணையமர்ந்து வானம் -குடையாக
அரையிலொன்று பூண அறையிலொன்று காய
முழமிரண்டு ஆடை -கவுபீன
அணியணிந்து நாடும் எளியஅன்பர் தேற
உரைபுகன்ற ‘’நானார்’(ஞான)-ரமணேசர்
பறையுமந்த மூல உறையில்தங்கும் வாளாய்
உடல்மறந்து வாழ -அருள்வாயே
திருமணந்து நாளும் திருமணங்கள் காணும்
திருவிடந்தை ஏன -பெருமாளே….கிரேசி மோகன்….
—————————————————————————————————————-