திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்….மூலவர் வராகர்(ஏன வடிவுற்று பூமாதேவியை ஏந்திக் காத்தவர்)….
————————————————————————————————————–

 

கிரேசி மோகன்

Tamil-Daily-News-Paper_25310480595
தனனதந்த தான தனனதந்த தான
தனனதந்த தான -தனதான
—————————————————————-perumal
”புரமெறிந்த நேரம் தொழமறந்த ஈசன்
ரதமழுந்து மாறு -புரிவேழன்
வரமிரண்டு ஓடும் குறமடந்தை மேனி
தழுவுகந்த வேலன் -முறைமாம

கரமிரண்டு பானை தனிலுகந்த ஈகை
உணவருந்தி சோணை -அடிவார
வெளியுகந்து ஆமை வடிவிருந்த பாறை
அணையமர்ந்து வானம் -குடையாக

அரையிலொன்று பூண அறையிலொன்று காய
முழமிரண்டு ஆடை -கவுபீன
அணியணிந்து நாடும் எளியஅன்பர் தேற
உரைபுகன்ற ‘’நானார்’(ஞான)-ரமணேசர்

பறையுமந்த மூல உறையில்தங்கும் வாளாய்
உடல்மறந்து வாழ -அருள்வாயே
திருமணந்து நாளும் திருமணங்கள் காணும்
திருவிடந்தை ஏன -பெருமாளே….கிரேசி மோகன்….

—————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *