மக்கள் கேட்கும் கேள்விகள் (3)

0

பவள சங்கரி

தலையங்கம்

உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,

உங்கள் மருமகன் மெய்யப்பன் செய்த தவறுகளனைத்தும் தாங்கள் அறியாமலே நடந்துள்ளது. இதனால் பல கோடி பணம் கைமாறியதும் தலைவராகிய தங்களுக்கேத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி பி.சி.சி.ஐ. இன் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்து மிகச் சிறந்த நிர்வாகத்தை உங்களால் எப்படித்தர முடியும்? ஆனால் உச்சநீதி மன்றத்திற்கு இவையனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து உங்களை உடனடியாகப் பதவி விலகும்படிக் கூறியுள்ளார்கள். நீங்கள் பதவி விலகி அந்தப் பொறுப்பிற்குரிய கௌரவத்தையும், அந்த விளையாட்டிற்குரிய பெருந்தன்மையையும் காக்கப் போகிறீர்களா?

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *