திருமால் திருப்புகழ் (38)
கிரேசி மோகன்
தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான -தனதான…..
——————————————————————————————————————
“மலையருணை மேவும் ஞான ரமணமுனி கூறும் நானை
ஒழிமனவி சார வேகம் -வரவேணும்
ஒருநினைவி லாத மோன நிலையினில்சு கானு பாவ
பரபிரும மாக நானும் -அருள்வாயே
புலனசைவின் மோக தாப ஜலம்வரள காயும் பூமி
நிலையடைய சாது வாகி -இகவாழ்வில்
வருவதனை ஏசி டாது பெறுவதனில் கூசி டாது
வெறுமைதனில் ஏக மாகி -மருளாது
சலனமதி லாது கோரம் அழகுஅபி மான பேதம்
அதுயிதுயெ னாது யாவும் -எனதாக
சமரசசு பாவ மோடு வடஅருணை கோயில் கோபு
ரஅமணிஅம் மாளின் வாழ்வை -உறவேணும்
மலைபசிய மாக நீள மரகதவி ரோத மேனி
அலைகடலில் சேடன் மீது -சொகுசாக
வனசமகள் பாதம் நீவ வளரும்விழி யோக சீய
மயிலைநகர் கேச வாதி -பெருமாளே”
————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://narasimhar.blogspot.in/2009/08/blog-post_13.html