கிரேசி மோகன்

ஸ்ரீகுருவாயூரப்பன்….
——————————————

guruvayur

தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த -தனதான….

——————————————————————————————————————-

நாலு மூணும் அஞ்சிரெண்டும் ஏழுதானி ருந்துமந்தGuruvayur Krishna santhana seva_cr1
பாழும்நான கந்தைவந்து -வழிவேறு
போகுமாறு மந்த்ர தந்த்ர தூபம் போட சிந்தையெந்த்ரம்
மாறிடாது என்றுமந்தர் -முகமாக,

மூலம்ஈசர் என்றுணர்ந்து தேகபாவம் வென்றெழுந்து
ஆலவாய்அ கன்றகந்த -ரமணேசர்
கூறும்பேத நெஞ்சுகந்த போலிநான்வி ழுந்தபொந்தில்
ஞானநான்தொ டர்ந்துபொங்க -அருள்வாயே.

மாரிநீலன் சண்டமுண்டன் மேனியாவை யும்பிளந்த
காளிமாயி கொங்கையுண்டு -பலமாகி
சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்துகொன்ற
பாலனார்ம னம்கவர்ந்த -முறைமாம
ஆலிலேமி தந்துஅன்று ஏழுலோகம் உண்டுமிழ்ந்து
சேரநாடொ துங்கியங்கு -குருவாயூர்
பாலனாய்வ ளர்ந்துசங்கு காலநேமி கொண்டுஅங்கை
பீலிபீத கம்புனைந்த -பெருமாளே
———————————————————————————————————————-

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *