கடித இலக்கியப் பரிசுப் போட்டி
பவள சங்கரி
அன்பு நண்பர்களே,வணக்கம். ‘கடித இலக்கியப் பரிசுப் போட்டி’ க்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்துவிட்ட இத்தருணத்தில் இப்போட்டியின் மாபெரும் வெற்றியாக 61 இடுகைகள், இப்போட்டிக்காக வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. படைப்புகள் அனைத்தும் வெளியிட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிகப்படியான படைப்புகள் வந்து குவிந்துள்ளதால், முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்கு மேல், மூன்றுபேருக்குத் தலா ரூ.250 ஆறுதல் பரிசாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். திருமதி தேமொழி அதற்கான தொகையையும் மனமுவந்து வழங்கியுள்ளார்கள். படைப்புகள் அனைத்தும் நம்முடைய வல்லமை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கீழே இணைத்திருக்கிறோம். இதில் யாருடைய படைப்பாவது பிரசுரம் ஆகாமல் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம். படைப்பு அனுப்பிய தேதி, தலைப்பு, பெயர், முகவரி முதலிய விவரங்களுடன், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
ஆசிரியருக்கு
நன்றி. அருமையான தொகுப்பு. இதில் கடிதம் இலக்கம் 25 ம் 30 ம் ஒரே கடிதம்தான். இரண்டு முறை பதிவாகி உள்ளது. என்பதை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் மொத்த கடிதங்கள் எண்ணிக்கை “மணிவிழா” எண்ணிக்கையில் 60 வதாக மாறி விடும் என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நன்றி.
எஸ்.பாலசுப்ரமணியன்
அம்பத்தூர்
சென்னை -600 053.
9789778442
02.04.2014
தகவலுக்கு நன்றி. விட்டுப்போன ஒரு இடுகை அங்கு சேர்க்கப்பட்டுள்ளது.
அன்புடன்
பவள சங்கரி
கடித இலக்கியப் போட்டியில் இவ்வளவு பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது. கலந்துகொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இப்படியொரு போட்டியின் மூலம் பலரையும் எழுதத்தூண்டிய வல்லமை குழுவினருக்கும் ஆசிரியருக்கும் பாராட்டுகள். வழங்கவிருந்த பரிசுகளோடு மேலும் மூன்று பரிசுகளைத் தர முன்வந்துள்ள தேமொழி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
vanakkam,
Indha katturaiyil varisai yen 54il ulla yenadhu katturaiyil muthalil thuvankum 4vathu pathiyil ‘The Letters from a father to his Daughter’ yendra angila ezhuthurukkal ankilathirukku maatrapadavali..
athe pola Keezhula pathikalil Gym, Treadmill Practice, Plastic yendra pathangal ankila eshuthuruvikku Maatra vendukiren
இயந்திரங்களைச் சார்ந்து வாழாத அன்றைய நாளில், காலையில் எழுந்து காலார நடந்து பணிகளுக்கு நடந்து செல்வது, கிணற்றிலிருந்தோ, ஊருணியிலிருந்தோ குடிநீர் கொண்டுவருவது, குளங்களில் கிணற்றில் குதித்து நீச்சலடித்து குளிப்பது என செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் நம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், நலத்தையும் அளித்தது. தற்போதைய நிலையில் இதனைச் செய்ய, வீட்டிலிருந்து இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சிக் கூடத்திற்கு (ழுலஅ) செல்கின்றனர்.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைஉயர்வு, வாகனத் தேய்மானம், வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு தீமைகளை நம்மை அறியாமலேயே நாம் செய்து வருகிறோம் என்பதை உணர வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பயிற்சி இயந்திரம்(கூசநயனஅடைட ஞசயஉவiஉந) போன்ற இயந்திரங்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமானவற்றை நாம் விரயமாக்கி வருகிறோம்.
நுகர்வுக் கலாச்சாரத்தால் துர்நாற்றம் மிகுந்த தூர்வார இயலாத சாக்கடை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இதற்கு அங்காங்கே கொட்டப்பட்டுள்ள ஞெகிழி (ஞடயளவiஉ) குப்பைக் குவியலும், கொசுப் பெருக்கமும் சான்றாகும். வீட்டுக்குப் பின்னாலேயே குப்பை கொட்டப்பட்ட காலத்திலும், ஆடுமாடுகள் வீட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்ட நிலையிலும் கூட இவ்வளவு கொசுக்களின் பெருக்கம் இருந்ததில்லை.