திருமால் திருப்புகழ்…. (46)
கிரேசி மோகன்
திருப்புல்லாணி தர்ப சயன பெருமாள் ராமர்….
——————————————————————————
——————————————–
தனத்தய் தான தான தனத்தய் தான தான
தனத்தய் தான தான -தனதான….
———————————————————————————————————–
விருப்பில்லாது வாழ்வில் ,வெறுப்பில்லாது தாழ்வில்
இருப்பில்தோயும் சோணை -ரமணேசர்
உரைப்பில்கூறும் நானை, மறைப்பில்லாது காண,
உறுப்பில்லாத பார்வை -அருள்வாயே
செருப்பில்தேசம் ஆள பிறப்பில்நாலில் ஆழ்வார்,
வனத்துள்காலம் ஈரேழ் -பொழுதாள
ஒருச்சொல் தாரம் பாணம் எனச்செல் ,வேடர் கூறும்
கதைக்குள் வாழும் நாத -அருள்வாயே
ஒருப்புள் காகம் சீதை, உறுப்பில் கீற, வீசும்
ஒருப்புல் வாளி கோப -சிவராம
கடித்தவ்ஆயி போடும், கனிக்குள் பாசம் ஊற
படைப்பில் ஜாதி மீறும் -தவராமா
குரக்கர் சேனை யோடு அரக்கர் சேனை சாய,
களைப்பில் தேக வாதை -அதுதீர
தவப்புல் மீது ஏளும், கருப்பில் நீல மேனி
திருப்புல் லாணி ராம -பெருமாளே
———————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://thiruppul.blogspot.in/2010/03/blog-post_21.html
நக்கீரன்